You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு: சமூக ஊடகங்களில் தீயாக கருத்துகள்
சென்னை மெரினாவில் அமைந்துள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் 40 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தினார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது தான் பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டதாக எழுப்பிய குற்றச்சாட்டுகளை அடுத்து சமூக வலைத்தளங்களில் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
#paneer என்ற தலைப்பில் ட்விட்டர் தளத்திலும், பேஸ்புக்கிலும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பிபிசி தமிழின் நேயர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அவற்றில் சில:
இலங்கை நேயர் பெர்னாண்டோ வினிதர்ஷினி: ஜெயலலிதா சம்பாதித்த ஒரே செல்வம். பன்னீர்செல்வம் 👏 👏 👏 ❤
சென்னை நேயர் செல்வம் ஜெகநாதன் : .பன்னீரு , ப ன்னீரு, - சூப்பரா சொன்னீரு-
டெல்லி நேயர் ராஜேஷ் : இது பி ஜே பியின் அரங்கேற்றம் போல் தெரிகிறது.. பார்ப்போம்.
வடலூர் நேயர் சி ஆர் திவாகர் : நான் மாற்று கட்சியாக இருந்தாலும், என் ஆதரவு கண்டிப்பாக ஓபிஎஸ் க்கு உண்டு..!
தஞ்சாவூர் நேயர் ரமேஷ் நாராயணன் : என்ன நடந்தது? கவர்னர் தாமதம் இப்போழுது விளங்கியது...ஸ்டாலின் டெல்லி பயணம் யோசிக்க வைக்கிறது!!
இலங்கை நேயர் சுபாஷ் கரண் :ஓ.பி.எஸ் :) அய்யா . . இதைத்தான் எதிர் பார்த்தோம். நீங்க துணிச்சலா செயல்படுங்க
சென்னை நேயர்:ரவி பாலா தாரணி : ரூம்ல கட்டாய படுத்தினார்கள் சரி, எம் எல் ஏ கூட்டத்தில் தைரியமாக இதை சொல்ல வேண்டியது தானே!
உடையார்பாளையம் நேயர் : ஆசையும் பதவியும் யாரை விட்டு வைத்தது.அதற்கு சில நாட்களாக நடக்கும் நாடகங்கள்.கடைசியில் தமிழ்நாட்டின் மக்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சி பின்னோக்கி உள்ளது.
சென்னை நேயர் இலங்கேஸ்வரன் ஷண்முகசுந்தரம் : முதலமைச்சரையே நிர்ப்பந்தம் செய்து கையொப்பம் வாங்கும் மாபியா,"பயந்து" ராஜினாமா செய்த முதல்வர், வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு, இவர்களை நம்பி தமிழக மக்கள்.
கொழும்பு நேயர் தேவி முரளி: நிச்சயமாக வாபஸ் பெற்று தமிழ்நாட்டை திறம்பட ஆளனும்.