அபிநந்தன் வர்தமான் இந்தியா வந்த பிறகு என்ன நடக்கும்?

அபிநந்தன் வர்தமான்

பாகிஸ்தான் பிடியில் இருக்கும் இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான், இந்தியா வந்த பிறகு என்ன நடக்கும்?

அபிநந்தனை ஒப்படைத்த பிறகு என்ன நடக்கும் என்று இந்திய ராணுவத்தின் மேஜர் ஜெனரல் ராஜ் மேத்தாவிடம் பிபிசி கேட்டது. அவர் கூறியது:

1. முதலில் அபிநந்தன் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்படுவார்.

2. செஞ்சிலுவை சங்கம் அபிநந்தனிடம் மருத்துவப் பரிசோதனை செய்து, அவருக்கு ஏதும் உடலால் தீங்கிழைக்கப்பட்டுள்ளதா என்று பரிசோதனை நடத்தும். அவருக்கு ஏதேனும் மருந்து தரப்பட்டுள்ளதா? உடல் ரீதியாக, மன ரீதியாக அவர் துன்புறுத்தப்பட்டுள்ளாரா? என்று ஆராய்ந்து செஞ்சிலுவை சங்கம் அறிக்கை தரும். இது ஜெனீவா ஒப்பந்தத்தின்படி அவசியமானதாகும்.

3. இந்தப் பரிசோதனைக்குப் பிறகு அவர் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்படுவார்.

4. விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு அவருக்கு முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்யப்படும். அதற்கென சிறப்பு மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

5. அதன் பிறகு ராணுவ உளவுப் பிரிவு அபிநந்தனிடம் முழுமையாக விசாரணை நடத்தும். அவருக்கு என்ன நேர்ந்தது? எப்படி நேர்ந்தது? பாகிஸ்தானில் அவருக்கு நடந்தது என்ன? அவர்கள் என்ன பேசினார்கள். இவர் என்ன பேசினார் என்பவை முழுமையாக விசாரிக்கப்படும்.

6. அபிநந்தன் பாகிஸ்தான் பிடியில் இருந்தபோது அவருக்கு ஆட்சேபகரமாக ஏதேனும் நடந்திருந்தால் அது பற்றி ஐ.நா.வில் இந்தியா முறையிடும்.

இந்தியா பாகிஸ்தான் மோதல்: யாருக்கு வெற்றி?

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :