You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
போப் பிரான்சிஸ்: "ஒரு பாலுணர்வு வேரூன்றியவர்களுக்கு திருச்சபையில் இடமில்லை"
ஒருபாலுறவு என்பது தீவிரமான விஷயம் என்றும், உணர்வு ரீதியாகவும், மனிதத் தன்மையிலும் முதிர்ச்சி அடைந்தவர்களையே திருச்சபைக்குத் தேர்வு செய்யவேண்டும் என்றும் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
மதச் செயல்பாடுகள் குறித்து ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு மிஷனரி பாதிரியாருக்கு அளித்த நேர்க்காணலில் போப் பிரான்சிஸ் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
ஒரு பாலுறவு என்பது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது என்று கூறிய போப் பிரான்சிஸ், பிரம்மச்சரியத்தின் மீதான உறுதிமொழியை கடைப்பிடிக்க மதகுருக்களை வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று, போப் பிரான்சிஸ் அளித்த நேர்க்காணலின் முக்கிய பகுதிகளை இத்தாலிய நாளேடு ஒன்று பிரசுரித்தது.
மதகுருக்களை தேர்ந்தேடுக்கும் தேவாலயங்கள் சரியான நபர்களை அடையாளம் காண்பதில் பெரும் சிரத்தை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
"ஒருபாலுணர்வு வேறூன்றிய போக்கு கொண்ட நபர்களை திருச்சபை பணிகளுக்கு ஏற்றுக்கொள்ள வேண்டாம் என வத்திகான் வலியுறுத்துகிறது.”
இந்த கட்டுப்பாடுகள் கன்னியாஸ்திரியாக விரும்பும் பெண்களுக்கும் பொருந்தும் என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :