நைஜீரியா: அடிக்கடி நடக்கும் மதக்கலரவம், 55 பேர் பலி

அதிபர் முஹமத் புஹாரி

பட மூலாதாரம், NurPhoto / getty images

படக்குறிப்பு, அதிபர் முஹமத் புஹாரி

நைஜீரியாவில் வடக்கு கடுனா மாகாணத்தில் உள்ள கடைவீதி ஒன்றில் வெவ்வேறு மத நம்பிக்கை உடைய இருதரப்புக்கிடையே நடந்த சண்டையில் 55 பேர் மரணித்ததாக அதிபர் முஹமத் புஹாரி தெரிவித்துள்ளார்.

கசுவான் மகானி நகரத்தில் சுமை தூக்குபவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ இளைஞர்கள் தங்களுக்கிடையே சண்டையிட்டு கொண்டனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்நகரம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருவேறு மதத்தினர், இனக்குழுவின் உள்ளிட்டோர் இடையே நைஜீரியாவில் அடிக்கடி மோதல்கள் உண்டாகி வருகின்றன.

Nigeria

22 பேர் கைது

இந்த வன்முறை சம்பவத்தை அடுத்து 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஆணையர் தெரிவித்தார்.

அந்த நகரத்தில் ஊரடங்கு உத்தரவும் பிறபிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில் அடிக்கடி இருதரப்புக்கு இடையே சண்டை நடந்து வருகிறது.

நைஜீரியாவில் மதக்கலவரம்: 55 பேர் பலி

பட மூலாதாரம், Garba Shehu

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

எந்த மதமும் வன்முறையை ஆதரிப்பது இல்லையெனவும், நாட்டின் வளர்ச்சிக்கு அமைதியும் இணக்கமும் தேவை என அதிபர் புஹாரி கூறியதாக அவரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

சகிப்புதன்மையை ஊக்கிவிக்கும் பணியில் மதத்தலைவர்கள் ஈடுப்பட வேண்டுமென்றும் அதிபர் கூறி உள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :