You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அண்ணாந்து பார்க்கும் மாளிகை கட்டி... அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி...
புகைப்படக்கலைஞர் ஜானி மில்லர் தென்னாப்பிரிக்காவில் உள்ள நகரங்களில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ’டிரோன்’ கேமராக்கள் மூலம் முதலில் படம் பிடித்தார்.
பின்னர் மெக்சிகோ சிட்டி, மும்பை, நைரோபி, டெட்ராய்ட் உள்ளிட்ட உலகின் பிற நகரங்களையும் அவ்வாறே படம் பிடித்தார்.
டிரோன் மூலம் காட்சிப்படுத்தப்படும் புகைப்படங்கள் மூலம் நகரங்களில் நிலவும் ஏற்றத்தாழ்வை உணர முடிவதாக அவர் கூறுகிறார்.
"நமது சமூகத்தில் இருக்கும் சமத்துவமின்மை ஒளிந்து கிடக்கிறது. அதை தரையில் இருந்து பார்க்க முடியாது. நிலத்தில் உள்ள தடுப்புகள் நகரங்களில் நிலவும் அதீத பொருளாதார வேறுபாடுகளை பார்க்க விடாமல் செய்கின்றன," என்கிறார் அவர்.
புகைப்படங்களின் காப்புரிமை ஜானி மில்லர் @Millefoto
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்