உலகப்பார்வை: தூதரக ஊழியர்களின் குடும்பத்தினரை திரும்ப அழைத்த கனடா
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

பட மூலாதாரம், AFP
கியூபாவில் உள்ள தனது தூதரக ஊழியர்களின் குடும்பத்தினரை திரும்ப அழைத்த கனடா
கியூபாவின் தலைநகரான ஹாவானாவில் உள்ள தனது தூதரக ஊழியர்களின் குடும்பத்தினரை கனடா திரும்ப அழைத்துள்ளது.
கியூபாவில் உள்ள கனடா நாட்டை சேர்ந்த 10 பேருக்கு விளக்கமுடியாத மூளை நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கனடா நாட்டு அரசு கூறியுள்ளது.
சிரியாவில் நடத்தப்படும் வான்வழி தாக்குதல் சட்டப்பூர்வமானது
சிரியாவில், ' இன்னும் கூடுதலான மனித துன்பங்களை" தடுக்க சிரிய ஆட்சிக்கு எதிராக நடத்தப்படும் வான்வழித் தாக்குதல்களில் பிரிட்டன் சேர்ந்ததில் "சட்டப்பூர்வ மற்றும் தார்மீக உரிமை'' உள்ளது என பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார்.
சிறையில் கலவரம்

பட மூலாதாரம், Reuters
அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தில் உள்ள அதிகபட்ச பாதுகாப்பு சிறையில் நடந்த கலவரத்தில் குறைந்தது 7 கைதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 17 கைதிகள் காயமடைந்தனர்.
இணைய வன்பொருளை ஹைஜாக் செய்யமுயற்சி

பட மூலாதாரம், EPA
அத்தியாவசிய இணைய வன்பொருளை ஹைஜாக் செய்ய, ரஷ்ய அரசின் ஆதரவு பெற்ற ஹேக்கர்கள் தீவிரமாக முயற்சிப்பதாக அமெரிக்க மற்றும் பிரிட்டன் உளவுத்துறை அமைப்புக்கள் கூறுகின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












