You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அல்ஜீரியா: ராணுவ விமான விபத்தில் 257 பேர் பலி
அல்ஜீரியாவின் தலைநகரில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 257 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பெளஃபாரிக் ராணுவ விமான நிலையத்திலிருந்து பறக்க தொடங்கியவுடன் விமானம் விபத்துக்குள்ளானது.
விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது அல்ஜீரியாவில் நடந்த மிக மோசமான விமான விபத்து ஆகும்.
மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதில் இறந்தவர்கள் பலர் ராணுவத்தினரும் அவர்களது குடும்பமும் ஆகும் என பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. மேலும் விமானக் குழுவினரும் இதில் பலியாகியுள்ளனர்.
இந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தில் 14 அவசர மருத்துவ ஊர்திகள் உள்ளதாகவும், காயமடைந்தோர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் உள்ளூர் தொலைக்காட்சி செய்தி அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து புகை வெளிவருவது இந்த விமான விபத்தின் காணொளி காட்டுகிறது.
இந்த விமானம் மோதியது தொடர்பாக, விசாரணைக்கு ஆணையிட்டுள்ள படைத்தலைவர், சம்பவ இடத்தை பார்யிடுவார் என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
4 ஆண்டுகளுக்கு முன்னாள், ராணுவ அதிகாரிகளையும், அவர்களின் குடும்ப உறுப்பினரையும் ஏற்றி சென்ற விமானம் ஒன்று மோதியதில், 77 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்