You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கேட்டலன் தேர்தல்: ஸ்பெயின் தோற்றுவிட்டதாக அறிவித்த பூஜ்டிமோன்
கேட்டலன் பிராந்தியத்திற்கான நாடாளுமன்ற தேர்தலில், ஸ்பெயின் அரசு தோற்கடிக்கப்பட்டு விட்டதாக அப்பிராந்தியத்தின் தலைவர்பூஜ்டிமோன் அறிவித்துள்ளார்.
தற்போது பிரஸ்ஸல்ஸில் தஞ்சமடைந்துள்ள கேட்டலோனியாவின் முன்னாள் அதிபரான பூஜ்டிமோன், இந்த முடிவு "கேட்டலன் குடியரசு" வென்றுவிட்டதை குறிப்பதாக பாராட்டினார்.
புதிய சட்டமன்றத்தில் பிரிவினைவாத கட்சிகள் மெல்லிய மற்றும் குறைந்த பெரும்பான்மையை கொண்டிருக்கும்.
இருப்பினும், கேட்டலோனியா ஸ்பெயினின் பாதி தன்னாட்சி பகுதியாக நீடிக்க விரும்பும் குடிமக்கள் கட்சியே மிகப்பெரிய கட்சியாக உள்ளது.
இதன் விளைவாக, அரசாங்கத்தை அமைப்பதற்கான உரிமை யாருக்கு வழங்கப்படும் என்பதில் குழப்பம் நிலவுகிறது.
கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட கேட்டலோனிய சுதந்திரத்திற்கான பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை சட்டவிரோதமானது என்று அறிவித்த ஸ்பெயின் அரசாங்கம் அப்பிராந்தியத்தின் தன்னாட்சி உரிமையை பறித்ததுடன் புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலையும் அறிவித்தது.
"இந்த முடிவை யாரும் சர்ச்சைக்குள்ளாக்க முடியாது" என்றும் பூஜ்டிமோன் கூறினார்.
சுமார் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டதில், கேட்டலோனிய சுதந்திர ஆதரவு கட்சிகளான ஒருங்கிணைந்த கேட்டலோனியா, கேட்டலோனியாவின் இடது குடியரசு கட்சி மற்றும் பாப்புலர் யூனிட்டி ஆகியவை இணைந்து மொத்தம் 70 இடங்களை வென்று பெரும்பான்மையை பெற்றுள்ளன
மொத்தம் 135 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் குடிமக்கள் கட்சி 25 சதவீத வாக்குகளை பெற்றதுடன் 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய குடிமக்கள் கட்சியின் தலைவரான ஐன்ஸ் அரிமடாஸ், தனது கட்சி "வெற்றியடைந்துள்ளதாக" தெரிவித்தார். மேலும், கூட்டணி அமைப்பது என்பது "கடினமென்றாலும் அதற்கு முயற்சி செய்வோம்" என்றும் அவர் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்