You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
50 வயது ஆண்களில் பத்தில் ஒருவரின் 'இதயம் 10 வயது கூடுதலாக இருக்கும்'
- எழுதியவர், கேட்டி சில்வர்
- பதவி, பிபிசி ஹெல்த்
செப்டம்பர் மாதத்தில் மட்டும் இங்கிலாந்தில் மாரடைப்பு அல்லது பக்கவாதத்தால் 7,400 பேர் இறக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
50 வயதை எட்டிய ஆண்களில் பத்தில் ஒரு ஆணின் இதயத்தின் வயது, அவரின் உண்மையான வயதை விட பத்து வருடங்கள் கூடுதலாக இருக்கும். எனவே அவர்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகம் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
1.2 மில்லியன் எண்ணிக்கையிலான மக்களிடம், 'பப்ளிக் ஹெல்த் இங்கிலாந்து' மேற்கொண்ட ஆய்வில், அவர்களுக்கு இதய ஆய்வு பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதில் 33,000 பேர் 50 வயதானவர்கள்.
இதய நோய்கள் ஆண்களின் மரணத்திற்கு முக்கிய முதல் காரணமாக இருந்தால், பெண்களின் மரணத்திற்கு இரண்டாவது முக்கிய காரணமாக இருக்கிறது.
இந்த இறப்புகளில் பெரும்பான்மையானவற்றை தவிர்க்கமுடியும், அதில் நான்கில் ஒரு பங்கினர் 75 வயதுக்கும் குறைவானவர்கள்.
"நமக்கு வயதாகும் வரை இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்துகளை கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது," என்று பி.எச்.இ-இன் இதய நோய்கள் பிரிவின் ஜமி வாட்டரால் கூறுகிறார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்