You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிளவுபட்ட நாட்டை ஒருங்கிணைக்கப் போவதாக மக்ரோங் உறுதி
தனக்கு கிடைத்த தேர்தல் வெற்றியின் மூலம் பிளவுபட்ட நிலையில் உள்ள நாட்டை ஒருங்கிணைக்கவும், நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்யப் போவதாகவும் ஃபிரான்ஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இமானுவேல் மக்ரோங் தெரிவித்துள்ளார்.
செல்லுபடியான வாக்குகளில், மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை பெற்று ஃபிரான்ஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்ரோங் தான்சந்திக்கவுள்ள சவால்கள் அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக ஒப்புக்கொண்டார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த இரண்டாவது சுற்று தேர்தலில், ஃபிரான்ஸ் வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் தேர்தல் வாக்களிப்பில் பங்கேற்காததால் வேட்பாளரை தேர்ந்தெடுக்காமலோ அல்லது தங்களின் வாக்குரிமையை வீணாக்கியோ உள்ளனர்.
தீவிர வலதுசாரி வேட்பாளர் மெரைன் லெ பென்னின் பாதுகாப்பு கொள்கைகளுக்கு ஆதரவாக பத்து மில்லியன் மக்களுக்கும் மேலானோர் வாக்களித்தனர்.
வாக்காளர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட காரணமாக இருந்த குடியேற்றம் மற்றும் வேலையின்மை பிரச்சனை ஆகியவற்றை மக்ரோங் சமாளிக்க வேண்டுமென ஒரு பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்