இஸ்ரேல் - பாலத்தீனம் பகை மூட்டிய படுகொலை: அமைதியை குலைத்தது எப்படி?
இஸ்ரேல் - பாலத்தீனம் பகை மூட்டிய படுகொலை: அமைதியை குலைத்தது எப்படி?
கடந்த 1995ஆம் வருடம் நவம்பர் 4ஆம் தேதி ஒரு அரசியல் கொலை நடந்தது. அது அண்மைக்கால அரசியல் வரலாற்றையே புரட்டிப்போட்ட சம்பவமாக மாறியது.
அந்த நாள் தீவிர யூத தேசியவாதியான இகல் அமீர், இஸ்ரேலிய பிரதமராக இருந்த இசாக் ராபினை (Yitzhak Rabin) நோக்கி இரண்டு முறை மிகத் துல்லியமாக துப்பாக்கியால் சுட்டார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் இசாக் ராபின் இறந்ததுடன், அவர் முன்னிறுத்திய அரசியல் நம்பிக்கையும் இறந்துபோனது.
இஸ்ரேலியர்களுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையே நீடித்த அமைதியை உருவாக்க முடியும் என்பதே அந்த நம்பிக்கை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



