You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகாராஷ்டிரா: ரயில் நடைபாதை மேம்பாலம் உடைந்து விழுந்து விபத்து - குறைந்தது 13 பேர் காயம்
மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பல்லர்ஷா ரயில் நிலையத்தில் நடைபாதை மேம்பாலம் திடீரென உடைந்து விழுந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்தியை ரயில்வே அதிகாரிகள் பிபிசி மராத்தி சேவையிடம் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த விபத்தின்போது, நடைபாதை மேம்பாலத்தில் நடந்துகொண்டிருந்த சிலர் ரயில் தண்டவாளத்தில் விழுந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் மொத்தமாக 13 பேர் நடைபாதை மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்ததாகவும் அவர்களுள் 6 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் இப்பக்கத்தில் தொடர்ந்து வழங்கப்படும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: • ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக் • டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர் • இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம் • யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்