யோகி ஆதித்யநாத் மீது பாஜகவில் அதிருப்தியா? - விளக்கும் காணொளி
உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளரியா தெரிவித்த கருத்துக்கள் அந்த மாநில அரசியலில் சர்ச்சைகளையும் ஊகங்களையும் உருவாக்கியுள்ளது. அத்துடன் கட்சிக்குள் அதிருப்தி நிலவுகிறது என்ற வதந்திகளுக்கும் ஊக்கம் கிடைத்துள்ளது.
மெளரியாவின் கருத்து மற்றும் பாஜகவில் நடந்து வரும் கூட்டங்களுக்கு மத்தியில் சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவும் நடந்துவரும் இந்த விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
ஞாயிற்றுக்கிழமை லக்னெளவில் நடந்த பாஜக செயற்குழு கூட்டத்தில் கேசவ் பிரசாத் மெளரியா உரையாற்றினார்.
சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படும் கே.பி.மௌரியாவின் பதிவின் வார்த்தைகள் அவரது ஞாயிற்றுக்கிழமை உரையிலிருந்து எடுக்கப்பட்டவை.
உத்தரப் பிரதேசத்தில் இப்போது இருக்கும் அரசியல் சூழலை விளக்கும் காணொளி இது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



