சென்னைக்கு மங்கும் பிளே ஆஃப் வாய்ப்பு - ஃபார்முக்கு வந்த ரோகித் சர்மாவால் மும்பை எளிதான வெற்றி

சிஎஸ்கே, மும்பை , எம்ஐ

பட மூலாதாரம், Getty Images

2025 ஐபிஎல்லில் தொடர்ச்சியான தோல்விகளில் இருந்து கடந்த போட்டியில் மீண்ட சென்னை அணி, மும்பைக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட் செய்து 5 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை எடுத்தது. இதனை சேஸ் செய்த மும்பை அணி ரோகித் ஷர்மாவின் அபார ஆட்டத்தால் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

'ஐபிஎல்-இன் எல் கிளாசிகோ' என்று வர்ணிக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான லீக் ஆட்டம் மும்பையில் நடந்தது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

சிஎஸ்கே, மும்பை , எம்ஐ

பட மூலாதாரம், Getty Images

துவக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திரா மற்றும் ஷேக் ரஷீத் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய தீபக் சஹர், நான்கு டாட் பந்துகளுடன் இரண்டு ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

நிதானமாக ஆடிய துவக்க ஆட்டக்காரர்கள், மூன்றாவது ஓவரின் கடைசி பந்தில்தான் முதல் பவுண்டரியை அடித்தனர். ஆனால் நான்காவது ஓவரின் முதல் பந்திலே சென்னை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அஷ்வினி குமார் வீசிய பந்தில், ரச்சின் ரவீந்திரா 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதிர்ச்சியடைந்த சென்னை ரசிகர்களுக்கு, அடுத்து களமிறங்கிய 17வயது அறிமுக வீரர் அயூஷ் மாத்ரே வாணவேடிக்கை காட்டினார். அதே நான்காவது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் சிக்ஸ் அடித்து அசத்தினார் அயூஷ்.

15 பந்துகளில் 32 ரன்கள் குவித்த அயூஷின் விக்கெட்டையும் தீபக் சஹர் வீழ்த்தினார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 15 பந்துகளில் 32 ரன்கள் குவித்த அயூஷின் விக்கெட்டை தீபக் சஹர் வீழ்த்தினார்.

அயூஷின் இன்றைய ஆட்டம் அசத்தலாக இருக்கப் போகிறது என சென்னை ரசிகர்கள் நம்பும் அளவுக்கு, ஏழாவது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விளாசினார். ஆனால், அவரது அசத்தலான ஆட்டம் ஏழாவது ஓவரின் கடைசி பந்தில் முடிவுக்கு வந்தது.

15 பந்துகளில் 32 ரன்கள் குவித்த அயூஷின் விக்கெட்டையும் தீபக் சஹர் வீழ்த்தினார்.

மறுபக்கம், தொடக்கம் முதலே பொறுமையாக ஆடிவந்த ஷேக் ரஷீத், எட்டாவது ஓவரில் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 20 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே அடித்து, சான்ட்னரின் பந்தில் ரியான் ரிக்கல்டன் ஸ்டம்பிங் செய்ததால் ஆட்டமிழந்தார்.

சிஎஸ்கே, மும்பை , எம்ஐ

பட மூலாதாரம், Getty Images

இந்த சூழலில் ஷிவம் துபேவும், ஜடேஜாவும் ஜோடி சேர்ந்தனர்.

ஒன்பதாவது ஓவரை அருமையாக வீசிய பும்ரா, பெரிய ஹிட்டர்கள் களத்தில் இருந்தபோதிலும் நான்கு ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

பத்தாவது ஓவரிலும் பவுண்டரிகள் எதுவும் சென்னை அணிக்கு கிடைக்காத நிலையில், 70 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற நிலை ஏற்பட்டது.

தொடங்கிய அதிரடி

ஷிவம் துபே, ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

11வது ஓவரை மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச வந்தார். அந்த ஓவரிலும் சென்னை அணியால் பவுண்டரிகள் அடிக்க முடியவில்லை.

தொடர்ந்து பவுலர்களை மாற்றும் உத்தியுடன் விளையாடிய மும்பை, டிரெண்ட் போல்ட், ஹர்திக் பாண்ட்யா, பும்ரா என மிடில் ஓவர்களில் பந்துவீச்சாளர்களை தொடர்ந்து மாற்றியது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு, 14வது ஓவரில் சென்னை அணிக்கு ஒரு சிக்ஸர் கிடைத்தது.

இந்த சிக்ஸின் மூலம் அதிரடியை தொடங்கிய ஷிவம் துபே, 15வது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து அசத்தினார்.

16வது ஓவரில் இந்த அதிரடியில் ஜடேஜாவும் இணைய, பவுண்டரிகள் பறந்தன. அந்த ஓவரில் மட்டும் 3 சிக்ஸர்கள் சென்னை அணிக்கு கிடைத்தன.

ஆனால், இந்த அதிரடி ஆட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 17வது ஓவரில் பும்ராவின் பந்துவீச்சில் ஷிவம் துபே 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து தோனி களம் இறங்க, 17 மற்றும் 18வது ஓவரில் சென்னைக்கு பவுண்டரிகள் எதுவும் கிடைக்கவில்லை.

19வது ஓவரை பும்ரா வீசினார். 4-ஆம் பந்தில் தோனி திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நோக்கி வந்த பந்தை தோனி அடிக்க அதனை திலக் வர்மா கேட்ச் பிடித்தார்.

கடைசி ஓவரின் ஜடேஜா ஸ்ரைக் எடுத்து 3-ஆம் பந்தில் ஒரு சிஸ்சர் மற்றும் அடுத்த பந்தில் ஒரு ஃபோர் அடித்து அரைசதத்தை பூர்த்தி செய்தார்.கடைசி ஒவரில் 16 ரன்கள் எடுத்து சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை எடுத்தது.

எளிதாக வென்ற மும்பை அணி

சிஎஸ்கே, மும்பை , எம்ஐ

பட மூலாதாரம், Getty Images

177 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை அணி பேட்டிங் செய்தது. இந்த சீசனின் தொடக்கம் முதலே ஃபார்மில் இல்லாத ரோகித் ஷர்மா இன்று தனது சொந்த மைதானத்தில் ஃபார்முக்கு திரும்பினார்.

ஹிட் மேன் என்ற பெயருக்கு என்ன பொருள் என்பதை காட்டும் வகையில் அவரது ஆட்டம் இருந்தது. இவருடன் களமிறங்கிய ரிக்கெல்டன் 19 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும், பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் ரோகித் ஷர்மாவுக்கு உறுதுணையாக ஆடினார்.

ருத்ர தாண்டவம் ஆடிய ரோகித் ஷர்மா 45 பந்துகளில் 76 ரன்களைக் குவித்தார். சூர்யகுமார் யாதவ்,30 பந்துகளில் 68 ரன்களை எடுத்தார். சென்னை அணி நிர்ணயித்தது மிகச்சாதாரண இலக்கு என்பது போல 15.4 ஓவர்களிலேயே இருவரும் சேர்ந்து இலக்கை எட்டினர். இதன் மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற மும்பை அணி, நிகர ரன்ரேட்டிலும் முன்னேற்றம் கண்டுள்ளது.

சிஎஸ்கே, மும்பை , எம்ஐ

பட மூலாதாரம், Getty Images

சென்னைக்கு மங்கும் பிளே ஆஃப் வாய்ப்பு

சிஎஸ்கே அணி ருதுராஜ் கேப்டன்ஷியில் அடுத்தடுத்து வாங்கிய தோல்விகள், வீரர்களின் மோசமான செயல்பாடு, ஃபார்மில் இல்லாத வீரர்கள் தேர்வு ஆகியவற்றால் முதல் போட்டியில் மட்டும் வென்ற சிஎஸ்கே அடுத்த 5 தோல்விகளை சந்தித்து மோசமான நிலைக்கு சென்றது.

காயம் காரணமாக ருதுராஜ் தொடரிலிருந்து விலகியதையடுத்து, கேப்டனாக தோனி அணியை வழிநடத்துகிறார்.

தோனி வழிநடத்திய முதல் போட்டியில் மோசமாக தோற்ற நிலையில் 2வது போட்டியில் சிஎஸ்கே வென்றது. இதுவரை சிஎஸ்கே அணி 8 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகள் 6 தோல்விகளுடன் 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் நிகர ரன்ரேட்டில் மைனஸ் ஆக கவலைக்குரிய இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே அணிக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள தோனி முன்பு 2 வாய்ப்புகள் உள்ளன.

சிஎஸ்கே அணிக்கு முன் இன்றைய போட்டியுடன் சேர்த்து 7 போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. இந்த 7 ஆட்டங்களில் குறைந்தபட்சம் 6 வெற்றிகள் நல்ல ரன்ரேட்டில் தேவை அல்லது சிக்கல் இல்லாமல் ப்ளே ஆஃப் செல்ல வேண்டுமென்றால் 7 ஆட்டங்களிலும் வெல்ல வேண்டும். ஆனால் இன்றைய போட்டியில் தோல்வியடைந்து விட்டது.

அவ்வாறு அடுத்துவரும் 6 போட்டிகளிலும் சிஎஸ்கே வென்றால் 12 புள்ளிகள் பெறும் ஏற்கெனவே 4 புள்ளிகளுடன் சேர்த்து 16 புள்ளிகள் பெறும். ஆனால் 16 புள்ளிகள் வைத்திருந்தால் ப்ளே ஆஃப் சுற்றில் நிகர ரன்ரேட் சிக்கல் வரலாம், மற்ற அணிகளிடமிருந்து கடுமையான போட்டியிருக்கும்.

இன்னும் ஒரு போட்டியில் தோற்றாலே சிஎஸ்கே நடையைக் கட்ட வேண்டியதுதான்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு