இந்திய அரசின் லேப்டாப் தடை அம்பானியின் ரிலையன்ஸ் வளர்ச்சிக்காகவா?

காணொளிக் குறிப்பு, இந்திய அரசின் லேப்டாப் தடை அம்பானியின் ரிலையன்ஸ் வளர்ச்சிக்காகவா?
இந்திய அரசின் லேப்டாப் தடை அம்பானியின் ரிலையன்ஸ் வளர்ச்சிக்காகவா?

மடிக்கணினி, கணினி மற்றும் டேப்லெட் ஆகிய மின்னணு சாதனங்களை இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கும் முடிவை அமல்படுத்துவதை இந்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், இந்தப் பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உடனடியாக அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்திய அரசின் லேப்டாப் தடை அம்பானியின் ரிலையன்ஸ் வளர்ச்சிக்காகவா?

பட மூலாதாரம், Getty Images

தற்போது புதிய அறிவிப்பில், இந்தப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் 31 அக்டோபர் 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்வதற்கான தடை உத்தரவு நவம்பர் 1, 2023 முதல் அமலுக்கு வரும் என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

மடிக்கணினி, கணினி, டேப்லேட் உள்ளிட்ட ஏழு பொருட்களின் இறக்குமதிக்கு திடீரென தடை விதிக்கப்பட்டது, தொழில்துறையில் கடுமையான எதிர்வினையை ஏற்படுத்தியது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: