You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு : உயர்நீதிமன்றம் கூறியது என்ன?
தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி என்ற மலை கிராமத்தில் 1992ம் ஆண்டில் வனத்துறையினர், காவல்துறையினர், வருவாய்துறையினர் கொடூர தாக்குதல் நடத்தி, பெண்கள் பலரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 2011-ம் ஆண்டு கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் 215 பேரை குற்றவாளி என கூறியது. இவர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்றும் அதில் ரூ.5 லட்சத்தை குற்றவாளிகளிடமிருந்து பெற்று தர வேண்டும் என்றும் கூறியது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்