சிறாவயல் மஞ்சுவிரட்டில் கட்டுமாடுகளால் பறிபோன இரண்டு உயிர்கள் - எப்படி?

காணொளிக் குறிப்பு, சிறாவயல் மஞ்சுவிரட்டில் கட்டுமாடுகளால் பறிபோன இரண்டு உயிர்கள் - எப்படி?
சிறாவயல் மஞ்சுவிரட்டில் கட்டுமாடுகளால் பறிபோன இரண்டு உயிர்கள் - எப்படி?

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் பிரபலமான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வட மஞ்சுவிரட்டு நடைபெறும்.

இந்நிலையில் 2024ஆம் ஆண்டு ஜனவரி 15, 16 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலங்காநல்லூர், பாலமேடு, சிறாவயல் மற்றும் பல்வேறு பகுதிகளில் மாடுபிடிக்கும் நிகழ்வுகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் ஆயிரக்கணக்கான மாடுகள், மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர், லட்சக்கணக்கான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

அதேநேரம் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற மாடுபிடி நிகழ்வுகளில் வீரர்கள், மாடுகள், பார்வையாளர்கள் எனப் பலர் காயமடைந்த சம்பவங்களும் நேர்ந்துள்ளன.

அதில் சிறாவயல் மஞ்சுவிரட்டில் 12 வயது சிறுவன் மற்றும் 32 வயது இளைஞர் ஒருவரும் மாடு முட்டி இறந்துள்ள சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)