You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோத்தாபய ராஜபக்ச வெளிநாடு செல்லத் தடை
இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு இலங்கையின் விசேட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கோதாபய ராஜபக்சவின் தந்தை டி.ஏ.ராஜபக்சவிற்கு நினைவு ஸ்தூபி, அருங்காட்சியம் ஆகியவற்றை அமைப்பதற்காக 33 மில்லியன் ரூபாய் அரசாங்கப் பணம் மோசடியாகப் பயன்படுத்தப்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் கோதாபய ராஜபக்ச மீது சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடி குறித்த விசாரணைகளுக்காக 'நிரந்தர நீதாய நீதிமன்றம்' என்ற பெயரில் விசேட மேல் நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 10) முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச உள்ளிட்ட ஏழு பேரும் ஆஜராகினர்.
இந்த ஏழு பேருக்கு எதிராக அரச சொத்துக்கள் தொடர்பான சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகைகள் நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ளன.
கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட சந்தேக நபர்கள் தலா 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா ஒரு மில்லியன் ரூபாய் சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், குறித்த 7 பேருக்கும் வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு எதிர்வரும் அக்டோபர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்
- 7 பேரையும் முன் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை - தமிழக அமைச்சரவை முடிவு
- ராஜீவ் காந்தி கொலை வழக்கு கடந்து வந்த பாதை
- இந்திய - பாகிஸ்தான் எல்லை: மூன்று கிலோ மீட்டரும், முடிவில்லாத பயணமும்
- கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை இல்லாத அணிவகுப்பு
- அமெரிக்காவின் எதிரி, தாலிபனின் நண்பர் - உயிரிழந்த ஹக்கானி யார்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்