You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் ஹர்பஜன் சிங் - காரணம் என்ன?
இந்திய பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக பிரபல சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அவரே தமது டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
ஏற்கெனவே ஐபிஎல் தொடரில் இருந்து சுரேஷ் ரெய்னா விலகுவதாக அறிவித்த நிலையில், ஹர்பஜன் சிங் விலகியிருக்கிறார். அவரது விலகல் அறிவிப்பு சென்னை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இது தொடர்பாக தமது டிவிட்டர் பக்கத்தில், தனிப்பட்ட காரணங்களுக்காக என்னால் ஐபிஎல் போட்டிகளில் இந்த ஆண்டு விளையாட முடியவில்லை. இது சோதனையான காலகட்டம். எனது தனிமைக்கு மதிப்பளிக்கப்படுவது முக்கியம். எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன் என்று ஹர்பஜன் கூறியுள்ளார்.
ஹர்பஜன் சிங்கின் இந்த முடிவு அவர் அங்கம் வகித்த சென்னை சூப்பர் கிங்க் அணி தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதனிடம் முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்புதான் சிஎஸ்கே அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா விலகுவதாக அறிவித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் போட்டிக்காக வீரர்கள் சென்ற நிலையில், சமீபத்தில் ஒரு வீரர் மற்றும் 13 ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. பிறகு இரு வீரர்கள் நீங்கலாக மற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை முடிவு நெகட்டிவ் என வந்தது.
பாதிக்கப்ப்டட இரு வீரர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் சிகிச்சை முடிந்து மறுபரிசோதனைக்கு பிறகு ஆட்டத்தில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிய வந்துள்ளது.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
இதற்கிடையே, சுரேஷ் ரெய்னா அணியில் இருந்து வெளியேறியது தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் ஊடக தகவல்கள் வெளியாகின. துபை சென்ற அவர் தாயகத்துக்கு திரும்பி விட்ட நிலையில், தொடக்கம் முதலே ஹர்பஜன் சிங் இந்தியாவிலேயே தங்கியிருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சிஎஸ்கே அணி நீங்கலாக மற்ற அனைத்து அணியினரும் வலை பயிற்சியில் ஈடுபடத்தொடங்கினார்கள். எஞ்சிய சிஎஸ்கே வீரர்கள் இன்று பயிற்சியை தொடங்கினார்கள்.
பிற செய்திகள்:
- "சிங்கம்" பட ஹீரோ போல இருக்காதீர்கள் - ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகளுக்கு பிரதமர் மோதி அறிவுரை
- கஃபீல் கான்: தேசத்துக்கு அச்சுறுத்தலா அல்லது அடக்குமுறையின் அடையாளச் சின்னமா?
- காட்டுமன்னார்கோயில் அருகே பட்டாசு தொழிற்சாலையில் விபத்து - 7 பெண்கள் பலி
- பாலியல் சுதந்திரம் தரும் நிர்வாண விடுதி கொரோனா மையமாக மாறியது
- தமிழக கோயில்கள்: பண்பாட்டுப் பெருமிதத்தின் உச்சம்
- பெய்ரூட் வெடிப்பு: இடிபாடுகளுக்கு இடையே இதயத் துடிப்பை தேடும் மக்கள்
- பாஜக எம்எல்ஏ ராஜா சிங்: இல்லாத பேஸ்புக் கணக்கை எப்படி முடக்குவார்கள்? பேஸ்புக் நடவடிக்கை பற்றி கேள்வி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: