பேட்மிண்டன்: இந்தோனேசியா சூப்பர் சீரிஸ் பட்டம் வென்று கிடாம்பி ஸ்ரீகாந்த் சாதனை
ஜகார்த்தாவில் நடைபெற்ற இந்தோனேசிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் பட்டத்தை கிடாம்பி ஸ்ரீகாந்த் வென்றுள்ளார்.

பட மூலாதாரம், GOH CHAI HIN/AFP/GETTY IMAGES
ஞாயிற்றுக்கிழமையன்று, இந்தோனேசியா சூப்பர் சீரிஸ் தொடரின் இறுதியாட்டத்தில் ஜப்பானின் கசுமசா சாகாயை 21-11, 21-19 என்ற நேர் செட் கணக்கில் கிடாம்பி ஸ்ரீகாந்த் வென்றார்.
இத்தொடர் முழுவதும் நன்றாக விளையாடி வந்த ஸ்ரீகாந்த், இறுதியாட்டத்தில் எதிராளிக்கு சற்றும் இடம் தராமல் மிகச் சிறப்பாக விளையாடினார்.
இன்றைய வெற்றியின் மூலம், இப்பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை கிடாம்பி ஸ்ரீகாந்த் பெற்றுள்ளார்.
இந்த பட்டத்தை வென்றதன் மூலம், இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வாலுக்கு பிறகு சூப்பர் சீரீஸ் தொடர்களில் மிகவும் வெற்றிகரமான இந்திய பேட்மிண்டன் வீரர் என்ற பெருமையை கிடாம்பி ஸ்ரீகாந்த் பெற்றுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












