"கிரீன்லாந்தை நினைவில் கொள்ளுங்கள்" - நேட்டோவை விமர்சித்த டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images
நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ருட்டை வெள்ளை மாளிகையில் சந்தித்த பிறகு மீண்டும் அந்த அமைப்பை தாக்கிப் பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். கடந்த காலங்களில் நேட்டோ தன்னை ஆதரிக்கவில்லை எனக் கூறும் டிரம்ப் எதிர்காலத்திலும் ஆதரிக்காது எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக ட்ரூத் சோசியல் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "நமக்கு அவர்கள் தேவைப்பட்டபோது நேட்டோ நம்மிடம் இல்லை. மீண்டும் நமக்கு தேவைப்படுகிறபோதும் அவர்கள் நம்முடன் இருக்க மாட்டார்கள். பெரிய, மோசமாக நிர்வகிக்கப்படும் பனிப் பகுதியான கிரீன்லாந்தை நினைவில் கொள்ளுங்கள்." எனத் தெரிவித்திருந்தார்.
கிரீன்லாந்தை அமெரிக்கா உடன் இணைக்கும் ஆசையை வெளிப்படுத்திய தனது முந்தைய கருத்தைக் குறிப்பிட்டு டிரம்ப் பேசியிருந்தார். நேட்டோ கூட்டாளிகளில் பலரும் கூட இதனை எதிர்த்திருந்தனர்.
இதற்கிடையே டிரம்ப் உடனான சந்திப்பு வெளிப்படையாகவும் திறந்தமனதோடும் நடந்ததாக நேட்டோ தலைவர் மார்க் ருட் சி.என்.என் தொலைக்காட்சியிடம் தெரிவித்தார். இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பிறகு உலகம் பாதுகாப்பாக இருக்கிறது என முற்றிலும் நம்பிக்கை உடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.


















