You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மும்பை ஒப்பந்ததாரர் தலையில் குப்பை கொட்டவைத்த சிவசேனா எம்.எல்.ஏ திலிப் லண்டே
மும்பை நகரத்தில் ஓர் ஒப்பந்ததாரரை நீர் தேங்கியுள்ள சாலையில் அமரச் செய்து, அவர் மீது குப்பைகளைக் கொட்டுமாறு கட்சி ஊழியர்களிடம் கூறியுள்ளார் மகாராஷ்டிரவில் ஆளுங்கட்சியாக இருக்கும் சிவ சேனா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திலிப் லண்டே.
இந்த சம்பவம், ஜூன் 12, சனிக்கிழமை நடந்ததாக ஏஎன்ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
ஏன் இப்படி செய்தீர்கள் என சண்டிவலி சட்டமன்ற உறுப்பினர் திலிப் லண்டேவைக் கேட்ட போது, ஒப்பந்ததாரர் தன் வேலையை முறையாகச் செய்யவில்லை. கழிவு நீர் வடிகாலை முறையாக சுத்தம் செய்யவில்லை எனவே தற்போது சாலையில் நீர் தேங்கிக் கொண்டிருக்கிறது என குற்றம் சாட்டினார்.
"சாலையில் நீர் தேங்காமல் சுத்தம் செய்யுமாறு, நானே கடந்த 15 நாட்களாக ஒப்பந்ததாரரிடம் கூறி வந்தேன். அவர் தன் வேலையை செய்யவில்லை. சிவ சேனா உறுப்பினர்களே இறங்கி வேலை செய்தனர். அதை தெரிந்து கொண்ட ஒப்பந்ததாரர் சம்பவ இடத்துக்கு விரைந்தார். இது அவருடைய வேலை என நான் அவரிடம் கூறினேன்" என்கிறார் திலிப் லண்டே.
இந்த சம்பவம் தொடர்பாக இணைய தளத்தில் பலரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்தும், சிவசேனா சட்டமன்ற உறுப்பினர் திலிப் லண்டேவை கண்டித்தும் வருகிறார்கள்.
மும்பை கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகளைக் கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, கடந்த வெள்ளிக்கிழமை மும்பை நகரத்தின் மேயர் கிஷோரி பெட்னேகர் கூறி இருந்தார்.
மேலும் கால்வாய்களில் குப்பை கொட்டுபவர்களைக் கண்டுபிடிக்க, சிசிடிவி பதிவுகளைப் பயன்படுத்துமாறும் நவி மும்பை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
"கழிவு நீர் வடிகால்களில், பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள் கொட்டுவதால், மழை நீர் வடிந்து செல்ல முடியாமல் தேங்கிக் கொள்கிறது. எனவே வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது" என கூறினார் மும்பை நகர மேயர் பெட்னேகர்.
மும்பை நகரத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. எனவே மும்பை நகரத்தின் பல பகுதிகளிலும் வெள்ளப் பெருக்குஏற்பட்டுள்ளதுடன் சாலைகளிலும் நீர் தேங்கி நிற்கிறது.
பிற செய்திகள்:
- 'சில நாடுகள் உலகின் விதியை நிர்ணயிக்கும் காலம் முடிந்துவிட்டது' - ஜி7 நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை
- அறநிலையத் துறை கோயில்களில் மோசடியைத் தடுக்க புதிய தணிக்கை முறை? எதிர்ப்புகள் ஏன்?
- 'உலகின் மிகப்பெரிய குடும்பத்தின்' தலைவர் மரணம்: 39 மனைவிகள், 94 குழந்தைகள்
- கொரோனா வைரஸ் திரிபுகள் இன்னும் எவ்வளவு மோசமடையும்?
- யார் இந்த கெளதம் அதானி? இவர் ஆசியாவின் 2ஆவது பெரிய பணக்காரர் ஆனது எப்படி?
- முதியோர்களை குறிவைக்கும் ஆன்லைன் மோசடி கும்பல்: தற்காத்து கொள்வது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்