கொரோனா தடுப்பூசி: மாநிலங்களுக்கான கோவேக்சின் விலை ரூ. 400 ஆக குறைப்பு

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை மாநில அரசுகளுக்கு வழங்க சமீபத்தில் நிர்ணயிக்கப்பட்ட ரூ. 600 தொகையை ரூ. 400 ஆக குறைத்திருப்பதாக கோவேக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோல, மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி மருந்து விலையும் டோஸ் ஒன்றுக்கு ரூ. 1,200 ஆக அந்த நிறுவனம் குறைத்துள்ளது.

பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு, அஸ்ட்ராசெனிகா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இந்தியாவின் புனேவில் உள்ள சீரம் இந்தியா நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தடுப்பூசியை தயாரித்து விநியோகித்து வருகிறது. அந்த நிறுவனம், சமீபத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் தனது தடுப்பூசி விலையை ரூ. 400 ஆக உயர்த்தியது. பிறகு அந்த விலையில் ரூ. 100 குறைக்கப்பட்டு ரூ. 300க்கு வழங்கப்படும் என சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அதார் பூனாவாலா தெரிவித்தார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இந்தியாவில் கோவிஷீ்ல்டு, கோவேக்சின் ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே தற்போது கொரோனா தடுப்பூசியை புழக்கத்தில் விற்று வருவதால், அவை திடீரென விலையை உயர்த்திய நடவடிக்கை பரவலான விமர்சனங்களை உள்நாட்டில் தூண்டியது. கொரோனா தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இலவசமாக வழங்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கோரினார்கள். ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் V தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி வழங்கியபோதும், அந்த தடுப்பூசி எப்போது இந்தியாவில் விற்பனையாகும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

இருப்பினும், தயாரிப்பு செலவினத்தை கருத்தில் கொண்டு ஆயிரக்கணக்கான கோடியில் ஏற்படும் செலவினத்தை சமாளிக்க நிதி வழங்குமாறு மத்திய அரசை தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கோரி வருகின்றன. இத்தகைய சூழலில்தான் தடுப்பூசி விற்பனை விலையை அவை அதிகரித்து பிறகு குறைத்தன.

கோவேக்சின் தயாரிக்கும் தடுப்பூசி மருந்து நிறுவனம் விலை குறைப்பு நடவடிக்கை தொடர்பாக வியாழக்கிழமை ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், நாட்டில் நிலவும் மிக சிக்கலான பெருந்தொற்று சூழலில் நாட்டின் பொது சுகாதாரத்துறை எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால்களை கருத்தில் கொண்டு மாநில அரசுகளுக்கு வழங்கும் கோவேக்சின் தடுப்பூசி மருந்தை டோஸ் ஒன்றுக்கு ரூ. 400க்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது, என்று கூறப்பட்டுள்ளது.

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு முதலில் முன்கள பணியாளர்களுக்கும் அதன் பிறகு 60 வயது கடந்தவர்கள், பின்னர் 45 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் ஆகியோர் தடுப்பூசி பெறலாம் என்று அறிவித்தது. இவர்களின் வரிசையில் 18 வயது முதல் 45 வயதுடையவர்களும் மே 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்த தடுப்பூசி நிறுவனங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான உடன்பாட்டின்படி, மாநில அரசுகளும் தனியார் மருத்துவமனைகளும் 50 சதவீத கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி மருந்தை வாங்க ஆர்டர் செய்து அதை நாட்டின் இளம் தலைமுறையினருக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 45 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. அந்த வகையில், மத்திய அரசுக்கு வழங்கப்படும் தடுப்பூசியை டோஸ் ஒன்றுக்கு ரூ. 150 என்ற அளவில் விற்க சீரம் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களில் சுமார் 1.33 கோடி பேர் தடுப்பூசி பெற அரசு ஆதரவுடன் இயங்கும் கோவின் செயலியில் முன்பதிவு செய்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: