பிபிசியின், இந்த வருடத்தின் சிறந்த இந்திய வீராங்கனை விருது நிகழ்ச்சியை இங்கே பார்க்கலாம்

இந்த ஆண்டுக்கான பிபிசியின் சிறந்த இந்திய வீராங்கனை (பிபிசி இந்தியன் ஸ்போர்ட்ஸ் வுமன் ஆஃப் த இயர்) விருதை பெறும் வீராங்கனை நேயர்களின் வாக்கெடுப்பின்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

இந்த விருதுக்காக இந்த வருடம் பரிந்துரைக்கப்பட்டவர்கள், தடகள வீராங்கனை டூட்டி சந்த், செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பி, ஏர் கன் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், ஃப்ரீஸ்டைல் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாத் மற்றும் தற்போது இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டனாக இருக்கும் ராணி.

பிபிசியால் தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவர் குழு, இந்திய விளையாட்டு வீராங்கனைகள் பட்டியலைத் தேர்வு செய்தது. அந்த குழுவில் இந்தியா முழுவதும் உள்ள விளையாட்டு செய்திகள் பிரிவு பத்திரிகையாளர்கள், நிபுணர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பங்கேற்றனர்.

நடுவர் குழுவால் அதிக வாக்குகளைப் பெற்ற 5 வீராங்கனைகள் பொதுமக்கள் வாக்குகளுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். அந்த வாக்களிப்பு முறை பிப்ரவரி 8 - 24 வரை நடைபெற்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :