ஜெயலலிதா வீட்டில் எவ்வளவு தங்கம், எத்தனை மின் சாதனங்கள் மற்றும் புத்தகங்கள் இருந்தன? - விரிவான தகவல்

ஜெயலலிதா

பட மூலாதாரம், Getty Images

மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையத்தில் 4 கிலோ தங்கமும் 601 கிலோ வெள்ளியும் 8376 புத்தகங்களும் இருந்ததாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள வேதா நிலையம் என்ற இல்லத்தில் வசித்துவந்தார். அவர் மறைந்த பிறகு அவரது சாதனைகளை நினைவுகூரும் வகையில் அந்த வீட்டை அரசுடமையாக்கி, நினைவில்லமாக்க தமிழக அரசு முடிவெடுத்தது.

இதற்கான அரசிதழ் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசிதழ் அறிவிப்பில் ஜெயலலிதாவின் இல்லத்தைக் கையகப்படுத்தியபோது என்னென்ன பொருட்கள் இருந்தன என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா

பட மூலாதாரம், TWITTER

அதன்படி, ஜெயலலிதாவின் இல்லத்தில் தங்கப் பொருட்கள் 14 இருந்ததாகவும் அவற்றின் மொத்த எடை 4 கிலோ 372 கிராம் என்றும் வெள்ளிப் பொருட்கள் 867 இருந்ததாகவும் அவற்றின் எடை 601 கிலோ 424 கிராம் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இவை தவிர, 11 டிவிக்கள், 10 ஃப்ரிட்ஜ்கள், 38 குளிர்சாதனக் கருவிகள், 556 ஃபர்னிச்சர்கள், 6514 சமையலறைப் பொருட்கள், 15 பூஜை பொருட்கள், 10,438 துணிகள், 29 தொலைபேசிகள், மொபைல் போன்கள், 8376 புத்தகங்கள், 653 ஆவணங்கள், 6 கடிகாரங்கள் ஆகியவையும் அவரது இல்லத்தில் இருந்ததாக தமிழக அரசின் அரசிதழ் தெரிவிக்கிறது.

இந்த இல்லத்திற்கான இழப்பீட்டுத் தொகை ஏற்கனவே தமிழக அரசால் நகர சிவில் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

ஜெயலலிதா வீட்டில் எத்தனை புத்தகங்கள்?

மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையத்தில் 4 கிலோ தங்கமும் 601 கிலோ வெள்ளியும் 8376 புத்தகங்களும் இருந்ததாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அவசரச் சட்டத்திற்கான அரசிதவ் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள வேதா நிலையம் என்ற இல்லத்தில் வசித்துவந்தார். அவர் மறைந்த பிறகு அவரது சாதனைகளை நினைவுகூரும் வகையில் அந்த வீட்டை அரசுடமையாக்கி, நினைவில்லமாக்க தமிழக அரசு முடிவெடுத்தது.

இதற்கான அவசரச் சட்ட அறிவிப்பு தமிழ்நாடு அரசின் அரசிதழில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்தவுடன், அவரது இல்லத்தை நினைவில்லமாக்க முடிவெடுத்து அதற்கான அறிவிப்பை 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று தமிழக முதலமைச்சர் வெளியிட்டார்.

இதற்குப் பிறகு இந்த இல்லத்தைக் கையகப்படுத்தும் பணிகள் துவங்கின. பிறகு, அரசு நினைவகத்திற்காக அந்த இல்லம் தேவைப்படுகிறது என்ற அறிவிப்பு இந்த ஆண்டு மே 6ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. நினைவில்லமாக்கும் அறிவிப்பை வெளியிட்ட காலகட்டத்தில் ஜெயலலிதாவுக்கென சட்டரீதியாக வாரிசுகள் இல்லை.

அவரது இல்லத்தில் இருந்த புத்தகங்கள், ஃபர்னிச்சர்கள் ஆகியவற்றை மூன்றாண்டுகளுக்கும் மேல் யாரும் பயன்படுத்தாமல் இருப்பதால் அவை வீணாகிவிடும் என்பதால் தற்காலிகமாக அவற்றை அரசின் பொறுப்புக்குக் கொண்டுவர முடிவுசெய்யப்பட்டது.

இந்த இல்லத்தையும் நிலத்தையும் கையகப்படுத்தும் பணிகள் முழுமையாக முடிந்ததும் இதற்கென ஒரு ஃபவுண்டேஷன் உருவாக்கப்பட்டு 'வேதா நிலையம்' அதன் பொறுப்பில் ஒப்படைக்கப்படும். அதற்குப் பிறகு, நினைவில்லத்தை அமைக்கும் பணிகள் துவங்கும்.

தற்போது தமிழக சட்டப்பேரவையைக் கூட்டும் சூழல் இல்லாததால், இதற்கென தமிழ்நாடு புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா மெமோரியல் ஃபவுண்டேஷன் அவசரச் சட்டம், 2020 கொண்டுவரப்படுகிறது.

இந்த நினைவில்லத்திற்கென புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா மெமோரியல் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் உறுப்பினர்களாக முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டவர்கள் இதன் உறுப்பினர்களாக இருப்பார்கள். முதலமைச்சர் இதன் தலைவராக இருப்பார்.

துணைச் செயலர் பதவிக்கு குறையாத ஒருவர் ஃபவுண்டேஷனின் செயலராக நியமிக்கப்பட்டு, அவர் அன்றாடப் பணிகளைக் கவனிப்பார்.

அவசரச் சட்டத்திற்கான இந்த அரசிதழ் அறிவிப்பில் ஜெயலலிதாவின் இல்லத்தைக் கையகப்படுத்தியபோது என்னென்ன பொருட்கள் பொருட்கள் இருந்தன என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஜெயலலிதாவின் இல்லத்தில் தங்கப் பொருட்கள் 14 இருந்ததாகவும் அவற்றின் மொத்த எடை 4 கிலோ 372 கிராம் என்றும் வெள்ளிப் பொருட்கள் 867 இருந்ததாகவும் அவற்றின் எடை 601 கிலோ 424 கிராம் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இவை தவிர, 11 டிவிக்கள், 10 ஃப்ரிட்ஜ்கள், 38 குளிர்சாதனக் கருவிகள், 556 ஃபர்னிச்சர்கள், 6514 சமையலறைப் பொருட்கள், 15 பூஜை பொருட்கள், 10,438 துணிகள், 29 தொலைபேசிகள், மொபைல் போன்கள், 8376 புத்தகங்கள், 653 ஆவணங்கள், 6 கடிகாரங்கள் ஆகியவையும் அவரது இல்லத்தில் இருந்ததாக தமிழக அரசின் அரசிதழ் தெரிவிக்கிறது.

இந்த இல்லத்திற்கான இழப்பீட்டுத் தொகை ஏற்கனவே தமிழக அரசால் நகர சிவில் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: