You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஓ. பன்னீர்செல்வம் - தமிழக துணை முதல்வர் மருத்துவமனையில் அனுமதி
தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைகளுக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
நேற்று மாலை (மே 24) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வந்தார். அவருக்கு சில பரிசோதனைகளைச் செய்ய வேண்டுமெனக் கூறியதால் அந்த மருத்துவமனையிலேயே சேர்க்கப்பட்டார்.
இன்று காலையில் அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், அவருடைய உடல்நலம் சீரான நிலையில் இருப்பதாக எம்.ஜி.எம். மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இன்று பகலில் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி துணை முதல்வரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். துணை முதல்வர் இன்று மாலை வீடு திரும்புவார் என எம்.ஜி.எம். மருத்துவமனை தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: வீட்டுக்குள் இருந்தால் நோய் எதிர்ப்பாற்றல் எப்படி பாதிக்கப்படும்?
- 'கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியாவுக்கு முக்கிய பங்குள்ளது'
- அமெரிக்காவில் படையெடுக்கும் லட்சக்கணக்கான பூச்சிகள் - மனிதர்களுக்கு ஆபத்தா?
- கொரோனா வைரஸ்: ஊரடங்கு முடியும் நேரத்தில் நீங்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: