இஸ்ரோ தலைவர் சிவன் - "இந்தியா ஒருநாள் நிலவுக்கு மனிதனை அனுப்பும், ஆனால் தற்போது இல்லை"

இஸ்ரோ சிவன்

பட மூலாதாரம், Getty Images

"மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்காக நான்கு விண்வெளி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த மாத இறுதியில் பயிற்சிக்காக ரஷ்யா செல்வார்கள்," என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

மேலும், சந்திரயான் - 3 திட்டம் தொடங்கி, அதன் வேலைகள் வேகமாக நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

News image

பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவனிடம், நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் குறித்து கேட்டதற்கு, "ஒரு நாள் இந்தியா கட்டாயம் நிலவுக்கு மனிதனை அனுப்பும். ஆனால், தற்போதைக்கு இல்லை" என்று குறிப்பிட்டார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

ககன்யான் குறித்து மேலும் பேசிய அவர், 1984ஆம் ஆண்டு இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா ரஷ்ய விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றார். ஆனால், தற்போது இந்திய வீரர்கள் இந்தியாவில் இருந்து இந்திய விண்கலத்தில் செல்ல இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

இந்திய விண்வெளி ஆராச்சி மையம் சந்திரயான்-3 மற்றும் ககன்யான் திட்ட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

சந்திரயான்- 2 நிலவில் தறையிரங்கும் முயற்சி தோல்வி அடைந்தது. அதனைத் தொடர்ந்து சந்திரயான்- 3 மூலம் அதனை சாத்தியமாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :