குடியுரிமை திருத்த மசோதாவை கேரளா ஏற்காது: முதல்வர் பினராயி

பட மூலாதாரம், Getty Images
இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்த மசோதாவை கேரள மாநிலம் ஏற்காது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்று ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இந்தியாவை மத அடிப்படையில் பிளவுபடுத்த மத்திய அரசு முயல்வதாக கூறிய அவர், இந்த நடவடிக்கை சமத்துவத்தையும், மதச்சார்பின்மையையும் நாசம் செய்வதற்கானது என்றும் கூறியுள்ளார்.
மேற்குவங்கம் இந்த சட்டத் திருத்தத்தை ஏற்காது என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கெனவே அறிவித்திருக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:








