You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
மேலும் ஆதாரங்களை கலைக்கும் முயற்சியிலேயோ அல்லது சாட்சியங்களை மாற்றும் முயற்சியிலேயோ சிதம்பரம் ஈடுபடக்கூடாது என்றும், இது தொடர்பாக எந்த ஒரு நேர்காணலும் அல்லது அறிக்கையும் வெளியிடக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழக்கின் பின்னணி
2007-ம் ஆண்டு சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற நிறுவனம் வெளிநாட்டில் இருந்து 305 கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (FIPB) அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக 2017ம் ஆண்டு சி.பி.ஐ. ஒரு வழக்குப் பதிவு செய்தது. அமலாக்கத்துறையும் ஒரு வழக்குத் தொடர்ந்தது.
ப.சிதம்பரத்தின் மீதான ஊழல் புகார் தொடர்பாக அவரை சிபிஐ விசாரித்து வந்தது.
அதன்பின் இரு தினங்களுக்கு பிறகு இதே வழக்கில் பண மோசடி குற்றச்சாட்டில் இவரை விசாரிக்க காவலில் அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தை காவலில் எடுத்தது.
சி.பி.ஐ. வழக்கில் அவருக்கு ஏற்கெனவே ஜாமீன் கிடைத்த நிலையில், தற்போது அவருக்கு அமலாக்கத்துறை வழக்கிலும் தற்போது ஜாமீன் கிடைத்துள்ளது.
டெல்லி உயர்நீதி மன்றம் சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க மறுத்திருந் நிலையில் அவர், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர். பானுமதி, போபன்னா மற்றும் மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இதனை விசாரித்து சிதம்பரத்துக்கு இன்று ஜாமீன் வழங்கியது.
சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை இரண்டின் வழக்கிலுமே அவருக்குப் பிணை இருப்பதால் 100 நாள்களைக் கடந்து சிறையில் இருக்கும் சிதம்பரம் தற்போது சிறையில் இருந்து வெளியே வருகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்