You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கன மழையில் கேரள இடைத் தேர்தல் வாக்குப் பதிவு: வாக்குப் பதிவு மையத்தில் வெள்ள நீர் புகுந்தது
மகாராஷ்டிரா, ஹரியாணா மாநிலங்களின் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று திங்கள்கிழமை நடக்கிறது. அத்துடன், தமிழ்நாட்டின் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி உள்பட இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 51 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 2 மக்களைவை தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவும் இன்று நடக்கிறது.
மஹாராஷ்ட்டிர சட்டப்பேரவை தேர்தலில் 2 மணி வரை 36.03% வாக்குகள் பதிவாகியிருந்தன.
தமிழ்நாட்டில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி விக்கிரவாண்டியில் 65.79 % வாக்குப்பதிவும் நாங்குநேரியில் 52.18 % வாக்குப் பதிவும் நடந்திருந்தது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் சட்டமன்ற தொகுதியில் கனமழை காரணமாக மக்கள் சிரமத்துடன் வாக்குப் பதிவு செய்கின்றனர்.
"இடைத்தேர்தலை ஒத்தி வைப்பதற்கு வாய்ப்பு இல்லை ஆனால் , சிரமம் இன்றி வாக்கு பதிவு செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மழை நீர் புகுந்த பத்து வாக்கு பதிவு மையங்களை முதல் தளத்திற்கு மாற்றி அமைத்திருக்கிறோம்" என செய்தியாளர்களை சந்தித்த கேரளாவின் தலைமை தேர்தல் அதிகாரி டிகா ராம் மீனா தெரிவித்துள்ளார்.
மூழ்கும் வாக்குச் சாவடியில் கடமையாற்றும் வாக்காளர்கள்
உத்தரப்பிரதேசத்தில் 11 சட்டப் பேரவைத் தொகுதிகளின் நடக்கும் இடைத்தேர்தலில் பிற்பகல் 3.30 மணி நிலவரப்படி 36.9% வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஹிமாச்சல பிரதேசத்தின் தரம்சாலா மற்றும் பச்சட் தொகுதிகளின் இடைத்தேர்தலில் பகல் ஒரு மணிவரை 37.6 % மற்றும் 43.61% வாக்குகள் பதிவாகியுள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்