கன மழையில் கேரள இடைத் தேர்தல் வாக்குப் பதிவு: வாக்குப் பதிவு மையத்தில் வெள்ள நீர் புகுந்தது

வாக்களித்த பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

மகாராஷ்டிரா, ஹரியாணா மாநிலங்களின் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று திங்கள்கிழமை நடக்கிறது. அத்துடன், தமிழ்நாட்டின் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி உள்பட இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 51 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 2 மக்களைவை தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவும் இன்று நடக்கிறது.

மஹாராஷ்ட்டிர சட்டப்பேரவை தேர்தலில் 2 மணி வரை 36.03% வாக்குகள் பதிவாகியிருந்தன.

தமிழ்நாட்டில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி விக்கிரவாண்டியில் 65.79 % வாக்குப்பதிவும் நாங்குநேரியில் 52.18 % வாக்குப் பதிவும் நடந்திருந்தது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் சட்டமன்ற தொகுதியில் கனமழை காரணமாக மக்கள் சிரமத்துடன் வாக்குப் பதிவு செய்கின்றனர்.

"இடைத்தேர்தலை ஒத்தி வைப்பதற்கு வாய்ப்பு இல்லை ஆனால் , சிரமம் இன்றி வாக்கு பதிவு செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மழை நீர் புகுந்த பத்து வாக்கு பதிவு மையங்களை முதல் தளத்திற்கு மாற்றி அமைத்திருக்கிறோம்" என செய்தியாளர்களை சந்தித்த கேரளாவின் தலைமை தேர்தல் அதிகாரி டிகா ராம் மீனா தெரிவித்துள்ளார்.

மூழ்கும் வாக்குச் சாவடியில் கடமையாற்றும் வாக்காளர்கள்

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

உத்தரப்பிரதேசத்தில் 11 சட்டப் பேரவைத் தொகுதிகளின் நடக்கும் இடைத்தேர்தலில் பிற்பகல் 3.30 மணி நிலவரப்படி 36.9% வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஹிமாச்சல பிரதேசத்தின் தரம்சாலா மற்றும் பச்சட் தொகுதிகளின் இடைத்தேர்தலில் பகல் ஒரு மணிவரை 37.6 % மற்றும் 43.61% வாக்குகள் பதிவாகியுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :