You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
1.76 லட்சம் கோடி ரூபாய் உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்குகிறது ஆர்பிஐ
முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை ஏற்று மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது என ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் வசம் ரூ.9.6 லட்சம் கோடி உபரி நிதி உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இந்த உபரி நிதியில் இருந்து 1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், திங்கள்கிழமை நடந்த ஆர்பிஐ மத்திய குழு கூட்டத்தில் ஜலான் குழுவின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி உபரி நிதியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் வெளியான சில தகவல்களின்படி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதம் பற்றாக்குறை இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், ரிசர்வ் வங்கி வழங்கும் உபரி நிதி இந்த பற்றாக்குறையை சமாளிக்க உதவும் என்று கருதப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்