டெல்லி - ஆக்ரா சாலையில் பேருந்து விபத்து : 29 பேர் பலி

பட மூலாதாரம், AFP
உத்தரப்பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் வே எனப்படும் விரைவுச் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்தில் குறைந்தது 29 பேர் கொல்லப்பட்டனர்.
திங்கள்கிழமை காலை ஆக்ரா அருகே இந்த விபத்து நடந்துள்ளது.
லக்னோவில் இருந்து தலைநகர் டெல்லிக்கு சென்று கொண்டிருந்த அந்த பேருந்தில் சுமார் 50 பேர் பயணித்தனர்.
இந்தியாவில் விபத்துகள் ஏற்படுவது அடிக்கடி நிகழும். ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் ஒரு விபத்து ஏற்படுகிறது.
பேருந்து விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்த உள்ளூர்வாசிகள், அங்கு விரைந்து வந்து காயமடைந்த 20 பயணிகளை மீட்டனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
பேருந்து ஓட்டுநர், பேருந்தை இயக்கும்போது தூங்கி விட்டதால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, நெடுஞ்சாலையில் இருந்து விலகி ஓடி பள்ளத்தில் விழுந்தது.
டெல்லியில் இருந்து ஆக்ரா வரையில் செல்லும் யமுனா எக்ஸ்பிரஸ்வே, இந்தியாவின் நீளமான ஆறுவழிச்சாலைகளில் ஒன்றாகும்.
2012ஆம் ஆண்டில் இந்த சாலை திறக்கப்பட்டதில் இருந்து சுமார் 900 பேர் இதில் பயணிக்கும்போது விபத்தில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
முறையாக பராமரிக்கப்படாத வாகனங்கள், மோசமாக வாகனங்களை ஓட்டுவது, மற்றும் சாலைகளின் நிலையே இந்தியாவில் அதிகளவில் விபத்துகள் ஏற்படுவதற்கு காரணமாக கூறப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












