‘ஒரே நாடு ஒரே தேர்தல்’, 35,000 கி.மீ தேசிய நெடுஞ்சாலை - இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

பட மூலாதாரம், Getty Images
இந்திய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) நடந்த கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த ஆற்றிய உரையின் முக்கிய பத்து அம்சங்களை இங்கே தொகுத்துள்ளோம்.
- பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின்படி சுயதொழில் செய்வோருக்கு 19 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு 30 கோடி பேருக்கு கடன் வழங்கப்படும்.
- 2024ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதே நோக்கம்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
- ஜிஎஸ்டியை அறிமுகம் செய்ததால் ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை சாத்தியமாகியுள்ளது.
- கறுப்பு பணத்திற்கு எதிரான நடவடிக்கை வேகமாக மேற்கொள்ளப்படும்.
- 2022ஆம் ஆண்டிற்குள் பாரதமாலா திட்டத்தின்படி 35,000 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை கட்டுமானம் செய்யப்படும்.

பட மூலாதாரம், Getty Images
- மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐநா அறிவித்தது, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போக்குடன் அனைத்து நாடுகளும் உடன் நிற்கிறது என்பதை காட்டுகிறது.
- 2022ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் ககன்யான் விண்கலத்தில் இந்தியரை விண்வெளிக்கு அனுப்புவதற்கான செயல்பாடுகள் துரிதமாக மேற்கொள்ளப்படும்.
- ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பது காலத்தின் தேவையாக உள்ளது, நாட்டின் வளர்ச்சியை அது துரிதப்படுத்தும்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
- முத்தலாக் முறை கட்டாயம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
- 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








