You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணாமல் போன இந்திய விமானப்படையின் விமானம் - தேடும் பணி தீவிரம்
இந்திய விமானப்படையின் AN 32 விமானம் அசாம் ஜோர்ஹட் தளத்தில் இருந்து 12:25 மணிக்கு புறப்பட்டது.
கடைசியாக 13:00 மணிக்கு கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்த இந்த விமானம் பின்னர் தொடர்பை இழந்தது.
விமானதளத்தை அந்த விமானம் அடையவில்லை என்பதால் இந்திய விமானப்படை இது தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளது.
ஐந்து பயணிகள் உள்ளிட்ட எட்டு பேர் அந்த விமானத்தில் இருக்கின்றனர்.
விமானத்தை கண்டுபிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
"காணாமல் போன விமானம் தொடர்பாக இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் ராகேஷ் சிங்கிடம் பேசினேன். அவர் எனக்கு இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்." என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்வீட் செய்துள்ளார்.
நரேந்திர மோதியுடன் நடந்த திருமணம்: பிபிசியிடம் பகிர்ந்துகொண்ட யசோதாபென்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்