ஜெயலலிதாவுக்கு சொந்தமான நான்கு வீடுகள் முடக்கம்: வருமான வரித்துறை

ஜெயலலிதா

பட மூலாதாரம், Getty Images

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம், ஹைதராபாத்தில் உள்ள வீடு உள்ளிட்ட அவரின் நான்கு வீடுகள் முடக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதாவின் இறப்புக்கு பின்னர் அவரின் சொத்துகளை நிர்வகிக்க ஒரு நிர்வாகியை நியமிக்கக் கோரும் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையில், கடந்த ஜனவரி மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் வாய்வழிச் செய்தியாக கூறிய விவரங்களை ஆவணங்களாக சமர்ப்பித்தனர் என மனுதாரர் புகழேந்தியின் வழக்கறிஞர் நந்தகுமார் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

போயஸ் தோட்ட இல்லம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போயஸ் தோட்ட இல்லம் (கோப்புப்படம்)

நீதிமன்றத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சமர்ப்பித்த ஆவணங்களின்படி, ஜெயலலிதாவிற்கு 16.37 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து உள்ளது என்றும், அதில் 10.47 கோடி ரூபாய் பணமாக வங்கி கணக்குகளில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில் 42.25 லட்சம் ரூபாய் வாகனங்கள், படகு, விமானம் ஆகியவை அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் 2016-2017 நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்குப்படி பதிவான சொத்து விவரம் ஆகும்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில், 1990-91 முதல் 2011-12 நிதி ஆண்டுகளில் ரூ.10.12 கோடி செல்வ வரியை செலுத்தவில்லை என்றும் 2005-06 முதல் 2011-12 நிதி ஆண்டுகளில் 6.62 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆவணங்களை அதிகாரிகள் தாக்கல் செய்ததால், இந்த வழக்கின் மீதான அடுத்த விசாரணை ஜூன் 6ம் தேதி நடைபெறும் என நீதிபதிகள் சுந்தரேசன் மற்றும் சரவணன் தெரிவித்தனர் என வழக்கறிஞர் நந்தகுமார் கூறினார்.

பிற செய்திகள்: