விவசாயிகள் தற்கொலை: கடன் சுமையால் உயிரைவிட்ட விவசாயிக்கு ஒரு மகளின் உருக்கமான கடிதம்

மல்லப்பா, ஆந்திரப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு விவசாயி. கடந்த வருடம் ஆகஸ்டு மாதம், இவர் மளிகை சாமான்களை வாங்க டவுனுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

ஆனால், தனது இறுதிச் சடங்கிற்காக தனது குடும்பத்துக்கு தேவைப்படும் அனைத்து பொருட்களையும் வாங்குவதற்காகத்தான் அவர் சென்றார்.

அடுத்த நாள் அவர் பண்ணையில் இறந்தார். இந்த சம்பவம் அவரது கடைசி மகளை மிகவும் பாதித்துவிட்டது. அவர் தனது தந்தையின் செல்ல மகள்.

ஒரு வருடத்துக்குப்பிறகு, தன் தந்தை மீது அவர் வைத்த அன்பு, அவரது மறைவால் ஏற்பட்ட இழப்பு, துயரம் ஆகியவற்றை ஒரு கடிதம் மூலம் வெளிப்படுத்துகிறார்.

`குட்பை அப்பா' படம், அந்த கடிதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :