ராகுல் காந்தி தேனியில் பேச்சு: "கடனை செலுத்தாத விவசாயிகளை கைது செய்வதை சட்டவிரோதம் ஆக்குவோம்"

பட மூலாதாரம், Getty Images
கடனை செலுத்தாத விவசாயிகளை கைது செய்வது சட்டவிரோதம் என்று ஆக்குவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேனியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசினார்.
மேலும் அவர் பேசுகையில், தமிழ்நாட்டின் வரலாறு பிரதமர் மோதிக்குத் தெரியவில்லை என்றும், தமிழர்கள் விரும்பாததை அவர்கள் மீது திணிக்க முடியாது என்றும் கூறினார். பெரியார், கருணாநிதி ஆகியோர் புத்தகங்களை மோதிக்குப் பரிசளிக்க விரும்புகிறேன் என்றும் ராகுல் காந்தி கூறினார்.
தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மேலும் பேசிய அவர், "நரேந்திர மோதி அனைவருக்கும் 15 லட்சம் ரூபாய் தருகிறேன் என்று உறுதியளித்தார். ஆனால் நாங்கள் பொய் சொல்ல வரவில்லை. எங்களால் 15 லட்சம் தரமுடியாது. அது இந்திய பொருளாதாரத்தை அழித்துவிடும்.
ஆனால், எங்களால் 3.60 லட்சம் ரூபாய் வழங்க முடியும். இது இந்திய பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும்.
நரேந்திர மோதி உங்கள் பணத்தை எடுத்துக் கொண்டார். பெண்களிடம் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு அவர்களை துன்புற வைத்தார்.
சிறு வணிகர்களிடம் இருந்து பணத்தை பிடுங்கிக் கொண்டார். அந்த பணத்தை எல்லாம் நீரவ் மோதி, விஜய் மல்லையா மற்றும் அம்பாணிக்கு வழங்கினார்.
மோதியின் பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியால், மக்கள் வாங்கும் சக்தியை இழந்து விட்டார்கள். தொழில்களும் மந்தமாகி முடங்கிவிட்டன.
நரேந்திர மோதி வெறுப்பின் ஒட்டுமொத்த உருவமாக இருக்கிறார். ஆனால் அந்த வெறுப்பு அரசியலை வெறுப்பால் நாம் எதிர்க்க மாட்டோம். அன்பால் எதிர்கொள்வோம்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
தமிழகத்தை டெல்லியில் இருந்து கொண்டு நிர்வாகம் செய்யலாம் என்று நரேந்திர மோதி நினைக்கிறார். அவருக்கு தமிழகத்தின் வரலாறு தெரியாது. தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் சிறப்பு தெரியாது. "
முன்னதாக, "தமிழர்களையும், தமிழையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது; தமிழர்களால் மட்டுமே அது முடியும்" என்று கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
அடுத்த வாரம், அதாவது வரும் 18ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மாநிலம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், இன்று தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, கிருஷ்ணகிரி, சேலம், தேனி, மதுரை ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார்.
இந்நிலையில், கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "இந்தியா மொழி, இனம், கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு வேறுபாடுகளை கொண்ட நாடு. அதை புரிந்துகொள்ளாத நரேந்திர மோதி வெறுப்புணர்வு அரசியலை கொண்டு தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறார். தமிழர்களையும், தமிழையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது," என்று அவர் கூறினார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
அதுமட்டுமின்றி, பாஜக அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தொழில்துறைகள் முடங்கியுள்ளதாக ராகுல் காந்தி கூறினார்.
"ஆடை தயாரிப்புக்கு பெயர் பெற்ற திருப்பூர், பட்டுக்கு பெயர் பெற்ற காஞ்சிபுரம் ஆகியவற்றிலுள்ள தொழில்துறைகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக முடங்கியுள்ளன. பல்லாயிரக்கணக்கானோர் தங்களது வேலைகளை இழந்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் செயலிழந்த தொழில்துறைக்கு புத்துயிர் கொடுப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்று ராகுல் காந்தி பேசினார்.

பட மூலாதாரம், AFP
பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு அதை திரும்ப செலுத்தாமல் தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் சொகுசாக இருப்பதாகவும். ஆனால், ஆயிரக்கணக்கில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அவதிப்படும் விவசாயிகள் சிறைக்குள் தள்ளப்படும் மோசமான நிலை இருப்பதாகவும் கூறிய ராகுல், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அந்நிலையை மாற்றி காட்டுவோம் என்றும் கூறினார்.
"காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுமே ஒத்த கொள்கைகளை கொண்டுள்ளன. இந்த கூட்டணி வெற்றிபெற்றால், தமிழர்கள் தமிழர்களால் ஆட்சி செய்யப்படுவார்கள். ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராவார்," என்று அவர் மேலும் கூறினார்.
நாக்பூரிலிருந்து செய்யப்படும் ஆட்சியை மக்கள் அகற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பை மறைமுகமாக ராகுல் விமர்சித்தார்.
சேலத்தில் நடைபெற்ற திமுக கூட்டணியின் பிரசாரக் கூட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் ஒன்றாகக் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைதான் இந்தத் தேர்தலில் கதாநாயகன் என்று கூறினார்.
அதே கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, இந்தத் தேர்தல் இரு கொள்கைகளுக்கு எதிரான தேர்தல் என்று கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












