ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: 'வாக்குப் பதிவு இயந்திரம் மீது நம்பிக்கை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட வெற்றி இது'

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸிடம் ஆட்சியை இழந்த பாஜக. இது காங்கிரசுக்கு கிடைத்த ஆதரவா? பாஜகவுக்கு எதிரான மனநிலையா? என்ற நேற்றைய பிபிசி தமிழ் #வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு நேயர்கள் பதிவு செய்த கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.

இது வாக்கு இயந்திரத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட வெற்றி என்று ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்து இருக்கிறார் சகா அரசு.

பா.ஜ.கவுக்கு எதிரான அலை;பா.ஜ.கவைவிட காங்கிரஸ் மேல் என்ற நிலை என்பது தேவசகாயம் சாமுவேல்.

பா.ஜ.கவுக்கு எதிரான மனநிலைதான் இது என்கிறார் குமரேசன் அருமைநாதன்.

வேல் முருகன், "யாருக்கும் காங்கிரஸ் மேல பாசமெல்லாம் இல்லை பிஜேபி மேலுள்ள வெறுப்பு" என்கிறார் அவர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: