You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிறுமி வன்புணர்வு: பாரதியிருந்திருந்தால் ரத்தக் கண்ணீர் வடித்திருப்பார்
காஷ்மீர் சிறுமி வல்லுறவு குறித்து பேசிய கோவை சட்டக்கல்லூரி மாணவி இடைநீக்கம்.
பெண்கள் தங்கள் பிரச்சனைகளை விவாதிக்க ஆரோக்கியமான சூழல் நிலவுகிறதா?
பொது வெளியில் தங்கள் பிரச்சனைகளை எழுப்பும் பெண்களின் குரல் ஒடுக்கப்படுகிறதா? என்று பிபிசியின் வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
இதற்கு பிபிசி தமிழின் நேயர் சமூக வலைதளங்களில் பதிவிட்ட கருத்துக்களை தொகுத்து வழங்குகின்றோம்.
சரோஜா பாலசுப்ரமணியன் சொல்கிறார், "தற்போது பெண்கள் வெளியே வருவதற்கே ஆரோக்யமான சூழல் இல்லை, தங்கள் பிரச்சனைகளை வெளியில் எழுப்புவதை ஒடுக்குவதால் தவறு செய்யும் ஆண்களுக்கு சாதகமாகப் போய் விடுகிறது. சொல்லப்போனால் அந்தப்பெண்ணை பாராட்டியிருக்க வேண்டும். இடைநீக்கம் தண்டனை கண்டனத்துக்குரியது." என்கிறார்.
பார்த்திபன், "இது பெண்கள் சந்திக்கும் பிரச்சனை மட்டும் அல்ல. இதற்கு பின்னால் அரசியல் உள்ளது. இதை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் இந்த பாசிச பா.ஜ.கவால் இந்தியா முழுவதும் இது நிகழ்த்தப்படும்" என்கிறார்.
இதுதான் பெண்ணடக்குமுறை பெண்களுக்கு சுதந்திரம் எங்கே? என்று கேள்வி எழுப்புகிறார் முரளி தேவி.
துரை முத்துசெல்வம், "பெண்கள் தங்கள் பிரச்சனைகளை சொல்ல ஊடகங்கள் இருந்தாலும் இந்த சமூகம் அதை பயன்படுத்த தடை செய்கிறது என்பது தான் உண்மை.பெயருக்கு தான் சட்டங்களும் பாதுகாப்பும் இருக்கிறது இந்த நாட்டில். நூற்றில் இரண்டு தான் வெளியே வருகிறது."
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்