டெல்லியில் 8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு, உறவினர் கைது

டெல்லியில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட 8 மாத பெண் குழந்தை

பட மூலாதாரம், Getty Images

இந்திய தலைநகர் புதுடெல்லியில் 8 மாத பெண் குழந்தையை உறவினர் ஒருவரே பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியதாக குற்றஞ்சாட்டப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி ஷாலிமார் பாக் பகுதியை சேர்ந்த தம்பதியரின் பெண் குழந்தைக்குத்தான் இக்கொடுமை நேர்ந்துள்ளது. 28 வயதாகும் உறவினர் ஒருவர் 8 மாத குழந்தையை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளூர் மருத்துவனையில் சிகிச்சைக்காக குழந்தை அனுமதிக்கப்பட்டார்.

தானும், தனது மனைவியும் வேலைக்கு சென்றுவிட்டதாகவும், மனைவி வீடு திரும்பியபோது படுக்கையிலும் குழந்தையின் ஆடைகளிலும் ரத்தக்கறை இருந்ததை கண்டதாகவும் குழந்தையின் தந்தை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட 8 மாத பெண் குழந்தை

பட மூலாதாரம், Getty Images

குழந்தையை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியதாக குற்றஞ்சாட்டப்படும் நபரை கைது செய்துவிட்டதாகவும், அவர் ஒரு தினக்கூலி ஊழியர் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு (திங்கட்கிழமை) குழந்தையின் நிலைமையை அறிய மருத்துவமனைக்கு சென்ற டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மலிவால், குழந்தைக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் கொடூரமாக இருந்ததாக விவரித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில், பாதிப்புகளுக்கு உள்ளான குழந்தைக்கு மூன்று மணிநேர அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

பிரதமர் நரேந்திர மோதிக்கு கோரிக்கை ஒன்றை விடுத்த அவர், இதுபோன்ற குற்றங்களில் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், நாட்டிலுள்ள பெண்களை பாதுகாக்கும் பொருட்டு போலீஸாரின் எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

இச்சம்பவம் குறித்து நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு, இதைகாட்டிலும் ஒரு கொடூர சம்பவம் இருக்க முடியாது என்றும், பல பாலியல் வல்லுறவு சம்பவங்களை போல இந்த சம்பவமும் மறக்கப்பட்டு வெறும் ஒரு நினைவாக மேற்கொள்காட்டி பேசப்படும் என்று தனது வருத்தங்களை தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: