You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாலமேடு ஜல்லிக்கட்டு: மாடு முட்டியதில் ஒருவர் பலி
மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடந்து வரும் ஜல்லிக்கட்டில் பார்வையாளர் ஒருவர் மாடு முட்டியதில் உயிரிழந்துள்ளர்.
பலியான நபரின் பெயர் காளிமுத்து என்றும், 21 வயதான இந்நபர் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
மாடுகள் வெளியே செல்லும் தடுப்பு அருகே நின்று கொண்டிருந்த காளிமுத்து மீது மாடு முட்டியதாக இவரது உறவினரான வீரபாண்டி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை கோரிப்பாளையம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட காளிமுத்து வழியில் இறந்துள்ளார்.
முன்னதாக, இன்று காலை 8 மணிக்கு மதுரை, பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகாமாக தொடங்கின.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1080 காளைகள் பங்கேற்றுள்ளன. களத்தில் 1188 மாடுபிடி வீரர்கள் இருந்தனர்
பிற செய்திகள்:
- தென் ஆஃப்ரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணியினர் 2 நிமிடம் மட்டுமே குளிக்க அனுமதி
- பாக்தாத்: இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் 35 பேர் பலி
- ''நான் இனவெறியாளன் அல்ல'' : அதிபர் டிரம்ப்
- திமிறும் திமில்: பாலமேட்டில் தொடங்கியது ஜல்லிக்கட்டு!
- அதிபர் டிரம்பின் உடல்நலம் எப்படி உள்ளது? வெள்ளை மாளிகை விளக்கம்
- மெரினா `எழுச்சி’: இளைஞர் கூட்டம் தானாக வந்தது எப்படி?
- பிபிசி தமிழ் நேயர்களின் புகைப்படங்கள் பேசும் உணர்வுகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்