You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பப்புவாக இருந்து யுவராஜாக மாறிய ராகுல் காந்தி!
குஜராத் மாநில தேர்தல் பிரசார விளம்பரத்தில் ராகுல் காந்தியை 'பப்பு' என்று பா.ஜ.கவினர் குறிப்பிட தேர்தல் ஆணையம் தடைவிதித்திருந்த நிலையில், அதற்கு பதிலாக 'யுவராஜ்' என்ற வார்த்தையை பயன்படுத்த பா.ஜ.கவினர் தொடங்கியுள்ளனர்.
'பப்பு' என்றால் இந்தியில் சிறுவன் என்று அர்த்தம். காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ராகுல் காந்தியை பா.ஜ.க இந்த அடைமொழியுடன்தான் காலங்காலமாக விமர்சித்து வருகிறது.
இந்த நிலையில், குஜராத் மாநிலத்திற்கான 14-ஆவது சட்டப்பேரவை தேர்தல்களுக்கான தேதிகள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டன.
டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து குஜராத் மாநிலத்தில் பிரசாரங்களும் சூடுபிடித்துள்ளன.
இச்சூழலில், பா.ஜ.கவின் தேர்தல் பிரசார விளம்பரத்தில் ராகுல் காந்தியை கேலி செய்யும் விதத்தில் 'பப்பு' என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது. அதனை கண்டித்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், இது மிகவும் இழிவுப்படுத்தும் செயல் என்று கூறி 'பப்பூ' என்ற வார்த்தையை விளம்பரங்களில் பா.ஜ.கவினர் பயன்படுத்துவதற்கு தடைவிதித்தனர்.
இதுகுறித்த செய்தி வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. ட்விட்டரில் #pappucensored என்ற ஹேஷ்டேக் தேசியளவில் ட்ரெண்டானது.
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை கிண்டல் செய்து பலர் ட்விட்டரில் தங்களது கருத்துகளை பதிவிட்டிருந்தனர்.
அதேநேரம், பா.ஜ.க மற்றும் காங்.,தொண்டர்கள் வார்த்தை போரில் ஈடுபட்டனர்.
தற்போது, பப்புவுக்கு மாற்று தேடிய பா.ஜ.கவினர் அந்த வார்த்தைக்கு பதிலாக யுவராஜ் என்ற சொல்லை விளம்பரங்களில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்