You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தொடரும் ரயில் விபத்துகளுக்கு தார்மீக பொறுப்பேற்றார் இந்திய ரயில்வே அமைச்சர்
இந்தியாவில் அடுத்தடுத்து நடைபெறும் ரயில் விபத்துகளுக்கு தார்மீக பொறுப்பு ஏற்பதாக பிரதமர் நரேந்திர மோதியிடம் தெரிவித்துள்ளதாக இந்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த நான்கு நாட்களில் இரண்டாவது முறையாக இன்று கான்பூர் அருகே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 21 பேர் காயம் அடைந்தனர்.
உத்தரப் பிரதேசத்தின் ஆஜம்கரில் இருந்து புது டெல்லி நோக்கி கைஃபியாத் விரைவு ரயில் அதிகாலை 2.50 மணியளவில் வந்தபோது, அதன் 10 பெட்டிகள் ஒளரியா மாவட்டம் அருகே தடம் புரண்டன.
இது குறித்து ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, தனது ட்விட்டர் பக்கத்தில் விபத்தில் காயம் அடைந்த பயணிகள் அனைவரும் அருகே உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
ரயில்வே அமைச்சராக பதவியேற்ற கடந்த மூன்று ஆண்டுகளில் ரயில்வே துறையின் வளர்ச்சிக்காக ரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்து வருவதாக மற்றொரு டிவிட்டர் பதிவில் சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களில் இரண்டவது முறையாக உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த ரயில் விபத்துகள் குறித்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதியிடம் சுரேஷ் பிரபு இன்று பிற்பகலில் விளக்கம் அளித்தார்.
அப்போது, நாட்டில் தொடர்ச்சியாக நடந்து வரும் ரயில் விபத்துகளுக்கு தார்மீக பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக பிரதமரிடம் கூறியபோது, காத்திருக்குமாறு தன்னிடம் பிரதமர் கேட்டுக் கொண்டதாக சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை ஹரித்வார் செல்லும் கலிங்கா உத்கல் விரைவு ரயில் முசாஃபர் நகர் அருகே விபத்துக்குள்ளானது. அந்த சம்பவத்தில் 23 பேர் பலியாகினர்.
இந்த ஆண்டில் மட்டும் இன்று அதிகாலை ஏற்பட்ட ரயில் விபத்து சம்பவத்துடன் சேர்த்து மொத்தம் ஆறு ரயில் விபத்துகள் இந்தியாவில் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் மனித உயிரிழப்புகளுடன் கூடிய 10 மோசமான ரயில் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அதை விளக்கும் நாட்குறிப்பு இது.
பிற செய்திகள்:
- இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை: பொன் ஆரம் முதல் யானை வரை தப்பவில்லை!
- உலகின் அதிவேக ரயிலை மீண்டும் களம் இறக்கியது சீனா
- மனித கறி உண்பதாகக் கூறி போலீஸிடம் பிடிபட்ட நால்வர்!
- முகப்பவுடரால் புற்று நோய்: ஜான்சன் & ஜான்சனுக்கு 417 மில்லியன் டாலர் அபராதம்
- மனித கறி உண்பது அலுத்து விட்டதாகக் கூறி போலீஸிடம் சிக்கிய நால்வர்!
- முத்தலாக் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐந்து பெண்கள் யார்?
- படகு எத்தனை முறை நதியை கடக்க வேண்டும்? புதிரை கண்டுபிடியுங்கள்!
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :