You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சர்வாதிகார மனப்பான்மையுடன் போராட்டத்தை தீர்க்க நினைப்பதா : ஸ்டாலின் கண்டனம்
சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியவர்களை போலிசார் கலைத்ததற்கு தி.மு.கவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் உடனடியாக போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து ஜல்லிக்கட்டு இனி எக்காலத்திலும் தடை பட விடமாட்டோம் என்ற உறுதியை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், மாணவர் போராட்டத்தை சர்வாதிகார மனப்பான்மையுடன் காவல்துறை மூலம் தீர்க்க நினைப்பது கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்