தமிழக உணர்வுக்கு ஆதரவாக ஏ. ஆர். ரஹ்மான் உண்ணாவிரதம்

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழகமெங்கும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், தான் தமிழக உணர்வுக்கு ஆதரவாக நாளை (வெள்ளிக்கிழமை) உண்ணாவிரதம் இருக்கப் போவதாக பிரபல இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் அறிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஏ ஆர் ரஹ்மான் நாளை உண்ணாவிரதம் இருக்க போவதாக ட்விட்டர் தளத்தில் அறிவிப்பு

பட மூலாதாரம், TWITTER

இது தொடர்பாக இன்று ஏ. ஆர். ரஹ்மான் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில், ''தமிழகத்தின் உணர்வினை ஆதரிக்கும் விதமாக நான் நாளை உண்ணாவிரதம் மேற்கொள்ள இருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு நாட்களாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகமெங்கும் பல இளைஞர்கள், மாணவர்கள் , பெண்கள் போராடி வருகின்றனர்.

ஏ. ஆர். ரகுமான் நாளை உண்ணாவிரதம்

பல திரைப்பட நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயரிப்பாளர்களும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் தமிழக உணர்வுக்கு ஆதரவாக நாளை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்