You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தலைநகர் தில்லியில் இனிவரும் காலங்களில் பட்டாசு விற்பனைக்கு தடை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
இந்திய தலைநகர் தில்லியில் இனிவரும் காலங்களில் பட்டாசு விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. மேலும், தற்போது நடைமுறையில் உள்ள பட்டாசு விற்பனை உரிமங்களையும் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இங்கு பட்டாசுகள் பெரியளவில் பிரபலம் ஆனவை, ஆனால் அதிக மாசு ஏற்படுத்துபவை.
இந்த மாதம் தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து ஏற்பட்ட அபாயகரமான நச்சுப்புகைக்கு பட்டாசுகளும் காரணமாக இருந்தன.
மூன்று குழந்தைகளின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் இதுகுறித்து மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தங்களுடைய நுரையீரல் முழுமையாக வளர்ச்சியடையவில்லை என்றும், பட்டாசுகள் மூலம் மேலும் எங்களால் மாசை சுவாசிக்க முடியாது என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
பட்டாசு விற்பனைக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ள போதும், பட்டாசு வெடிப்பதற்கு தடைவிதிப்பதற்கு சாத்தியமில்லை என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.