"இந்தியர்கள் மீது நேசம், கீதையின் பெயரால் பதவியேற்பு" : பத்மஸ்ரீ விருது பெற்ற பிரிட்டன் எம்.பி பாப் ப்ளாக்மேன்

கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த பிரிட்டன் ஹரோ ஈஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினரான பாப் ப்ளாக்மேனுக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்துள்ளது இந்திய அரசு.

சரி யார் இந்த பாப் ப்ளாக்மேன்?

பாப் ப்ளாக்மேன் இந்திய அரசுக்கு நெருக்கமானவராகக் கருதப்படுபவர். காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசுக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டவர்.

இவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரோ ஈஸ்ட் பகுதியில் பெரும்பான்மையாக இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கிறார்கள். இந்தியாவை பூர்வீகமாக இல்லாத போதும் அங்கு நின்று வென்றார் பாப் ப்ளாக்மேன்.

ஹவுஸ் ஆஃப் காமான்ஸில் நாடாளுமன்ற உறுப்பினராக பகவத்கீதை மற்றும் பைபிள் மீது உறுதிமொழி எடுத்துப் பதவியேற்றவர் பாப் ப்ளாக்மேன்.

தனது ட்விட்டரின் முகப்பு படமாக இந்திய பிரதமர் மோதியுடன் இருக்கும் புகைப்படத்தையே பாப் ப்ளாக்மேன் வைத்துள்ளார்.

'பாரத் மாதா கி ஜே'

பத்ம ஸ்ரீ விருது பெற்றது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள ட்வீட்டில், இந்த விருது பிரிட்டனில் வாழும் அனைத்து இந்தியர்களுக்குமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த ட்வீட்டில் ஜெய்ஹிந்த் மற்றும் பாரத மாதா கி ஜே என்ற ஹாஷ்டேகுகளை பயன்படுத்தி உள்ளார்.

வலதுசாரிகள் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டதை சமூக ஊடகங்களில் கொண்டாடி வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: