You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரெக்ஸிட்: பிரிட்டன் வெளியேறுவதற்கான தேதியை நீட்டிக்க ஐரோப்பிய தலைவர்கள் ஒப்புதல்
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான (பிரெக்ஸிட்) தேதியை 2020ம் ஆண்டு ஜனவரி 31 வரை நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதனால், முன்பு திட்டமிட்டபடி பிரிட்டன் வரும் வியாழக்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறாது.
பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தால் அந்த தேதிக்கு முன்பாகவே கூட பிரிட்டன் வெளியேறலாம் என்று ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்க் தெரிவித்துள்ளார்.
முன்கூட்டியே, அதாவது டிசம்பர் 12-ம் தேதியே, பொதுத் தேர்தலை சந்திப்பதற்கான பிரதமர் போரிஸ் ஜான்சனின் முன்மொழிவின் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கத் தயாராகி வரும் நிலையில் இந்த முடிவு வந்துள்ளது.
இந்த மாத இறுதியில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறவேண்டியிருந்தது. இந்நிலையில், பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தத்துக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்காததுடன், வெளியேறுவதற்கான தேதியை நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பிரதமர் வேண்டுகோள் விடுப்பதை அவசியமாக்கும் வகையில் சட்டமும் இயற்றியது.
ஒப்பந்தம் போட்டுக்கொண்டோ அல்லது ஒப்பந்தம் இல்லாமலோ பிரிட்டன் நிச்சயம் அக்டோபர் 31-ம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்து வந்த நிலையில், அவருக்கு நாடாளுமன்றத்தில் பின்னடைவு ஏற்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்