திருவிழாவில் பெண்ணை முட்டிக் கொன்ற காளை

பட மூலாதாரம், EPA
பிரான்ஸின் தென்பகுதியில் உள்ள எக்-மோர்ட் நகரத்தில் உள்ளூர் விழா ஒன்றின்போது காளை முட்டி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
கான் நகரைச் சேர்ந்த அப்பெண், தன் கணவருடன் சனிக்கிழமையன்று காளைப் பந்தையத்தை பார்த்துக் கொண்டிருந்தார்.
பந்தையத்திற்கு பின் அங்கிருந்து சென்ற காளை ஒன்று, வேலியை தாண்டி குதித்ததில் அவர் மட்டும் தனியாக மாட்டிக்கொண்டார்.
தன் கொம்பால் அப்பெண்ணை முட்டிய காளை, அவரை தூக்கி எறிந்ததில் பல மீட்டர் தள்ளி சென்று விழுந்ததையடுத்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட அவர், பின்பு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அத்தம்பதியினர் வேலி அருகே நிற்க வேண்டாம் என அங்கிருந்த பொதுமக்களால் பலமுறை எச்சரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :








